திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "வரும் ஜூன் 14 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மதசார்பின்மை காப்போம் என்ற பேரணி திருச்சியில் நடைபெற உள்ளது.
பாஜக அரசு பொருப்பேற்று முதலே அரசியல் அமைப்பு சட்டத்தின் எதிரான தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதில் ஒன்று வக்பு திருத்த சட்டம். இது இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல, அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் எதிரானது. மதச்சார்பின்மை, அரசியல் அமைப்பு சட்டத்தை காப்போம் எனபதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் அவர், "தமிழ்நாட்டில் முருகன் பெயரில் அரங்கேற்ற உள்ள பாஜகவின் மதவாத அரசியல் எடுபடாது. தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள், தமிழ் மக்களின் ஆதி கடவுள் முருகனும் ஏமாற மாட்டார். ஆகவே இவர்களின் ஜம்பம் பலிக்காது. தென்மாவட்டங்களை குறிவைத்து பாஜக நயினார் நாகேந்திரனை தலைவராக்கி, மதுரையை மையமாக கொண்டு மத நம்பிக்கை கொண்ட மக்களை ஏய்த்து அவர்களை தங்கள் பக்கம் ஈர்க்க முயற்சிக்கிறது. ஆனால், இந்த முயற்சி வெற்றி பெறவில்லை.
பாஜக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளை மெல்ல மெல்ல அழித்து வருகிறது. தமிழ்நாட்டில் பாஜகவில் கூட்டணி சேரும் கட்சிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள். குறிப்பாக அதிமுக தோளில் பாஜக சவாரி செய்கிறது. அதிமுக வாக்குகளை பெற்றுகொண்டு,எங்களுடைய வாக்குகள் சொல்லக்கூடிய அரசியல் தான் பாஜக செய்து கொண்டு இருக்கிறது.
2026 தேர்தலில் அதிமுக தனது வாக்கு வங்கியை பாஜகவிடம் பறிகொடுக்க உள்ளது. இதனால் அதிமுக பலவீனம் அடையும். இதனால், பாஜக வலுப்பெற வாய்ப்புள்ளது. பாஜக வலுப்பெறுவதனால் முதல் பாதிப்பு அதிமுக என்பதை, அக்கட்சியினர் உணர வேண்டும்" என்றார்.
பீகார் தேர்தலில் பாஜக 'மேட்ச் பிக்சிங்' செய்யவுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "ராகுல் காந்தி கணிப்பு சரியானது. பாஜக இவிஎம் வாக்கு பதிவு இயந்திரங்களை வைத்து சூதாட்டம் நடத்துகிறது. வாக்கு பதிவு இயந்திர முறையை எதிர்த்து இந்திய அளவில், அனைத்து தரப்பு மக்களும், போராட வேண்டியது வரலாற்றின் கட்டாயம். இவிஎம் குறித்து ராகுல் காந்தி எச்சரித்து உள்ளார், நாமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றார்.
பாஜக அரசு பொருப்பேற்று முதலே அரசியல் அமைப்பு சட்டத்தின் எதிரான தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதில் ஒன்று வக்பு திருத்த சட்டம். இது இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல, அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் எதிரானது. மதச்சார்பின்மை, அரசியல் அமைப்பு சட்டத்தை காப்போம் எனபதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் அவர், "தமிழ்நாட்டில் முருகன் பெயரில் அரங்கேற்ற உள்ள பாஜகவின் மதவாத அரசியல் எடுபடாது. தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள், தமிழ் மக்களின் ஆதி கடவுள் முருகனும் ஏமாற மாட்டார். ஆகவே இவர்களின் ஜம்பம் பலிக்காது. தென்மாவட்டங்களை குறிவைத்து பாஜக நயினார் நாகேந்திரனை தலைவராக்கி, மதுரையை மையமாக கொண்டு மத நம்பிக்கை கொண்ட மக்களை ஏய்த்து அவர்களை தங்கள் பக்கம் ஈர்க்க முயற்சிக்கிறது. ஆனால், இந்த முயற்சி வெற்றி பெறவில்லை.
பாஜக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளை மெல்ல மெல்ல அழித்து வருகிறது. தமிழ்நாட்டில் பாஜகவில் கூட்டணி சேரும் கட்சிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள். குறிப்பாக அதிமுக தோளில் பாஜக சவாரி செய்கிறது. அதிமுக வாக்குகளை பெற்றுகொண்டு,எங்களுடைய வாக்குகள் சொல்லக்கூடிய அரசியல் தான் பாஜக செய்து கொண்டு இருக்கிறது.
2026 தேர்தலில் அதிமுக தனது வாக்கு வங்கியை பாஜகவிடம் பறிகொடுக்க உள்ளது. இதனால் அதிமுக பலவீனம் அடையும். இதனால், பாஜக வலுப்பெற வாய்ப்புள்ளது. பாஜக வலுப்பெறுவதனால் முதல் பாதிப்பு அதிமுக என்பதை, அக்கட்சியினர் உணர வேண்டும்" என்றார்.
பீகார் தேர்தலில் பாஜக 'மேட்ச் பிக்சிங்' செய்யவுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "ராகுல் காந்தி கணிப்பு சரியானது. பாஜக இவிஎம் வாக்கு பதிவு இயந்திரங்களை வைத்து சூதாட்டம் நடத்துகிறது. வாக்கு பதிவு இயந்திர முறையை எதிர்த்து இந்திய அளவில், அனைத்து தரப்பு மக்களும், போராட வேண்டியது வரலாற்றின் கட்டாயம். இவிஎம் குறித்து ராகுல் காந்தி எச்சரித்து உள்ளார், நாமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றார்.