இந்தியா

ஜிஎஸ்டி குறைப்பு: வரிக்குறைப்பு சலுகையைத் தராத நிறுவனங்கள் மீது புகார் அளிக்கச் சிறப்பு ஏற்பாடு!

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் பலனை நுகர்வோருக்கு அளிக்காத நிறுவனங்கள் மீது, 1915 என்ற இலவச எண் மற்றும் தேசிய நுகர்வோர் குறைதீர் போர்ட்டல் மூலம் புகார் அளிக்க மத்திய அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

 ஜிஎஸ்டி குறைப்பு: வரிக்குறைப்பு சலுகையைத் தராத நிறுவனங்கள் மீது புகார் அளிக்கச் சிறப்பு ஏற்பாடு!
ஜிஎஸ்டி குறைப்பு: வரிக்குறைப்பு சலுகையைத் தராத நிறுவனங்கள் மீது புகார் அளிக்கச் சிறப்பு ஏற்பாடு!
மத்திய அரசு அறிவித்துள்ள ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் பலனை நுகர்வோருக்கு அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் அளிக்க, மத்திய நுகர்வோர் விவகாரத்துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதன் மூலம், நிறுவனங்கள் வரிக்குறைப்பு பலன்களைப் பொருட்களின் விலையில் பிரதிபலிக்கின்றனவா என்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மக்கள் தங்கள் புகார்களை 1915 என்ற இலவச தொலைபேசி எண் மூலமாகவும், தேசிய நுகர்வோர் குறைதீர் போர்ட்டல் (National Consumer Helpline Portal) மூலமாகவும் பதிவு செய்யலாம். இந்த வசதி தமிழ் உட்பட 17 பிராந்திய மொழிகளில் கிடைக்கும்.

சமீபத்தில், மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்கள், வாகனங்கள் மற்றும் பல்வேறு பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைத்தது. இந்த வரிக்குறைப்பின் பலன்களை மக்களுக்குச் சென்று சேர்ப்பது அவசியம் என்பதால், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. எந்தவொரு நிறுவனமோ அல்லது வணிகரோ, வரிக்குறைப்புக்குப் பிறகும் பழைய விலையிலேயே பொருட்களை விற்பனை செய்தால், நுகர்வோர் உடனடியாகப் புகார் அளிக்கலாம். இந்தப் புகார் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.