குடியிருப்பு வளாகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த காவலர், மரத்தில் ஏறிய நபரை கவனித்து கீழே இறங்குமாறு கண்டித்துள்ளார். இதனால் திடுக்கிட்ட அந்த நபர் மரத்தின் பிடியிலிருந்து விலகினார். நல்வாய்ப்பாக அருகிலிருந்த கிளை ஒன்றை பிடித்துக்கொண்டார். 50 அடி உயரத்தில் கிளையினை பிடித்தவாறு காற்றின் திசையில் தொங்கி கொண்டு இருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் அவரை பத்திரமாக மீட்க, கூடாரம் அமைக்க பயன்படுத்தும் துணியை நாலாப்புறமும் இழுத்து பிடித்தவாறு அவரின் அசைவினை நோட்டமிட்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் கிளையின் பிடியை நழுவவிட்டார் அந்த நபர். இதனைத் தொடர்ந்து கீழே குடியிருப்பு வாசிகள் விரித்து வைத்திருந்த கூடாரத்துணி மீது விழுந்தார்.
குடியிருப்பு வாசிகளின் உதவியால் உயிருடன் மீட்கப்பட்டார். இருப்பினும், 50 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததால் பலத்த காயமடைந்தார். முதுகெலும்பு முறிந்த நிலையில் சிகிச்சைக்காக பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தரத்தில் தொங்கிய நபர் யார்? என்பது குறித்து தற்போது விசாரணை நடைப்பெற்று வருகிறது.
pic.twitter.com/KthzAFp7PW A man in #Bengaluru climbed a tree to pluck jackfruit… but ended up falling 50 feet instead. #Karnataka #Viral #ViralVideo #HarshadChopda #ShivangiJoshi #BALH4 #RishRee #1YearForKalkiKARNAge #Kalki2898AD
— Meera Mathur (@MeeraMathu50951) June 26, 2025
மது போதையில் பலாப்பழத்திற்கு ஆசைப்பட்டு, 50 அடி உயரத்தில் மரத்தின் கிளையை பற்றிக்கொண்டு அந்தரத்தில் தொங்கிய நபர் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.