இந்தியா

பீகாரிலிருந்து கினி நாட்டுக்கு ரயில் என்ஜின் ஏற்றுமதி – தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

பீகாரில் இருந்து கினி நாட்டுக்கு ரயில் என்ஜின் ஏற்றுமதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ஒடிசாவில் 18,600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளும் இன்று தொடங்குகிறது.

பீகாரிலிருந்து கினி நாட்டுக்கு ரயில் என்ஜின் ஏற்றுமதி – தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
பீகாரிலிருந்து கினி நாட்டுக்கு ரயில் என்ஜின் ஏற்றுமதி – தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
பீகாரில் உள்ள மேட்புரா ரெயில்வே தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ரயில் என்ஜின்கள் தற்போது ஆப்பிரிக்காவின் கினி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை இன்று (ஜூன் 20) பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார். இது இந்தியாவின் ரயில்வே தொழில்நுட்பத்தில் பெருமையை மேலும் உயர்த்தும் முக்கியமான படியாக கருதப்படுகிறது.

இந்த ரயில் என்ஜின்கள், “மேக்கின் இந்தியா” திட்டத்தின் கீழ் முழுமையாக இந்திய தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. உலக தரத்தில் உள்ள நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இந்த என்ஜின்கள், ஏற்கனவே பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. கினி நாடு, இந்திய ரயில்வே துறையின் தரத்தையும், நம்பகத்தையும் அடிப்படையாகக் கொண்டு ரயில் என்ஜின் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் ₹18,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கும் இன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதில் தேசிய நெடுஞ்சாலை, சாலை மேம்பாடு, குடிநீர் திட்டங்கள், மருத்துவ வசதி மேம்பாடு மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை அடங்குகிறது.

இந்த திட்டங்கள் ஒடிசாவின் மொத்த மேம்பாட்டில் மிக முக்கிய பங்காற்றும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சியடையும் என்றும், மறுபக்கம், உள்ளூர் வளர்ச்சி மேம்படும் என்றும், இது இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஒரு புதிய மைல் கல்லை அடையும் வகையில் அமையும் என்று நம்பப்படுகிறது.