சில தினங்களுக்கு முன்னர் தான், மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பகுதியில் 90 டிகிரி வளைவுடன் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், போபால் பாலத்திற்கு டஃப் கொடுக்கும் வகையில் ஆந்திராவில் கட்டப்பட்டுள்ள கூர்மையான பாலம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைத்தள பக்கத்தில், போபாலில் கட்டப்பட்டிருந்த பாலத்துடன் ஒப்பீட்டு ஆந்திராவில் கட்டப்பட்டுள்ள பாலத்தை நக்கல் தொணியில் விமர்சிக்கும் வகையில் ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் பெனுகொண்டா அருகே உள்ள வெங்கட்ரெட்டி பல்லேயில், ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்தப் பாலமானது (coordinates: 14.1149400, 77.6096307) மறுமுனையில் தேசிய நெடுஞ்சாலை 57 உடன் இணைகிறது. பாலத்தின் கூர்மையான வளைவு வாகன ஓட்டிகளுக்கு நிச்சயம் ஆபத்தை விளைவிக்கும் என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஒரு பயனர், “டெம்பிள் ரன் கேம்,போபால் வெர்ஷன்” என இப்பாலத்தை கிண்டலடித்துள்ளார். மற்றொரு பயனர், ”இந்த பாலத்தை கட்டியவர் கோவிட் ஊரடங்கு காலத்தில் பொறியாளர் பட்டம் பெற்றவர் போல” என விமர்சித்துள்ளார்.
இந்த பாலத்தின் கட்டுமான அமைப்புக்கு ஒரு சில ஆதரவுகளும் கிடைத்துள்ளன. ஒரு பயனர், “இந்த பாலமானது ரயில் பாதையினை கடந்து செல்கிறது. ரயில் பாதையின் இருபுறமும் உயர வேறுபாடுகள் இருப்பதால் கூர்மையான திருப்பங்கள் தவிர்க்க முடியாதது என கூறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த பாலத்தின் பயன்பாடானது, இருசக்கர வாகனங்கள் எவ்வித சிக்கல்களும் இன்றி இரயில் பாதையினை கடப்பதற்காக மட்டுமே. அதிவேக பயனத்திற்காக அல்ல. கனரக வாகனங்களுக்கு இந்த பாலத்தில் அனுமதி வழங்கப்படாது. ஆந்திரப் பிரதேசத்தில், குறிப்பாக நீர் ஓடைகள் அல்லது சீரற்ற நிலப்பரப்பில், இதுபோன்ற ஜிக்ஜாக் கட்டமைப்புகள் ரொம்ப இயல்பானவை” என தெரிவித்துள்ளார்.
போபால்- 90 டிகிரி மேம்பால கதை:
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஐஷ்பாக் ஸ்டேடியத்திற்கு அருகே புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம், 90 டிகிரி வளைவு காரணமாக பெரும் விமர்சனங்களை சந்தித்தது. ரூ.18 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலமானது 648 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலம் கொண்டதாகும். இந்த மேம்பாலம், மஹாமாய் கா பாக், புஷ்பா நகர் மற்றும் ரயில் நிலைய மண்டலத்தின் நெரிசல் மிகுந்த பகுதிகளை நியூ போபாலுடன் இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலத்தின் வடிவமைப்பு சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், அதன் குறைபாடு குறித்து மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ராகேஷ் சிங் விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் விமர்சனங்கள் அரசியல் நோக்கம் கொண்டவை என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ராகேஷ் சிங் கூறியுள்ள நிலையில், மேம்பால திட்டப்பணி குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும் எனவும் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Read more: வண்டி எப்படி திரும்பும்? 90 டிகிரி வளைவில் மேம்பாலம்.. எதிர்கட்சிகள் கடும் விமர்சனம்
18 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டிருந்த இந்த மேம்பால பணியானது, மின் இணைப்புகள் மாறுதல், மாநில பொதுப்பணித்துறை- ரயில்வேத்துறை இடையிலான ஒப்பந்தங்கள் போன்ற காரணங்களினால் 36 மாதங்களுக்கு மேல் ஆனது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைத்தள பக்கத்தில், போபாலில் கட்டப்பட்டிருந்த பாலத்துடன் ஒப்பீட்டு ஆந்திராவில் கட்டப்பட்டுள்ள பாலத்தை நக்கல் தொணியில் விமர்சிக்கும் வகையில் ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் பெனுகொண்டா அருகே உள்ள வெங்கட்ரெட்டி பல்லேயில், ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்தப் பாலமானது (coordinates: 14.1149400, 77.6096307) மறுமுனையில் தேசிய நெடுஞ்சாலை 57 உடன் இணைகிறது. பாலத்தின் கூர்மையான வளைவு வாகன ஓட்டிகளுக்கு நிச்சயம் ஆபத்தை விளைவிக்கும் என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Bhopal made a 90° flyover.
— Congress Kerala (@INCKerala) June 16, 2025
Andhra: "Hold my chai" pic.twitter.com/V89l82UEQC
ஒரு பயனர், “டெம்பிள் ரன் கேம்,போபால் வெர்ஷன்” என இப்பாலத்தை கிண்டலடித்துள்ளார். மற்றொரு பயனர், ”இந்த பாலத்தை கட்டியவர் கோவிட் ஊரடங்கு காலத்தில் பொறியாளர் பட்டம் பெற்றவர் போல” என விமர்சித்துள்ளார்.
இந்த பாலத்தின் கட்டுமான அமைப்புக்கு ஒரு சில ஆதரவுகளும் கிடைத்துள்ளன. ஒரு பயனர், “இந்த பாலமானது ரயில் பாதையினை கடந்து செல்கிறது. ரயில் பாதையின் இருபுறமும் உயர வேறுபாடுகள் இருப்பதால் கூர்மையான திருப்பங்கள் தவிர்க்க முடியாதது என கூறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த பாலத்தின் பயன்பாடானது, இருசக்கர வாகனங்கள் எவ்வித சிக்கல்களும் இன்றி இரயில் பாதையினை கடப்பதற்காக மட்டுமே. அதிவேக பயனத்திற்காக அல்ல. கனரக வாகனங்களுக்கு இந்த பாலத்தில் அனுமதி வழங்கப்படாது. ஆந்திரப் பிரதேசத்தில், குறிப்பாக நீர் ஓடைகள் அல்லது சீரற்ற நிலப்பரப்பில், இதுபோன்ற ஜிக்ஜாக் கட்டமைப்புகள் ரொம்ப இயல்பானவை” என தெரிவித்துள்ளார்.
போபால்- 90 டிகிரி மேம்பால கதை:
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஐஷ்பாக் ஸ்டேடியத்திற்கு அருகே புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம், 90 டிகிரி வளைவு காரணமாக பெரும் விமர்சனங்களை சந்தித்தது. ரூ.18 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலமானது 648 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலம் கொண்டதாகும். இந்த மேம்பாலம், மஹாமாய் கா பாக், புஷ்பா நகர் மற்றும் ரயில் நிலைய மண்டலத்தின் நெரிசல் மிகுந்த பகுதிகளை நியூ போபாலுடன் இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலத்தின் வடிவமைப்பு சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், அதன் குறைபாடு குறித்து மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ராகேஷ் சிங் விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் விமர்சனங்கள் அரசியல் நோக்கம் கொண்டவை என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ராகேஷ் சிங் கூறியுள்ள நிலையில், மேம்பால திட்டப்பணி குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும் எனவும் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Read more: வண்டி எப்படி திரும்பும்? 90 டிகிரி வளைவில் மேம்பாலம்.. எதிர்கட்சிகள் கடும் விமர்சனம்
18 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டிருந்த இந்த மேம்பால பணியானது, மின் இணைப்புகள் மாறுதல், மாநில பொதுப்பணித்துறை- ரயில்வேத்துறை இடையிலான ஒப்பந்தங்கள் போன்ற காரணங்களினால் 36 மாதங்களுக்கு மேல் ஆனது குறிப்பிடத்தக்கது.