கேரளாவில் ராப் இசை மூலம் பிரபலமான பாடகர் வேடன் என அறியப்படும் ஹிரந்தாஸ் முரளி மீது பாலியல் வழக்குகள் பதியப்பட்ட நிலையில், அவருக்கு முன்ஜாமீன் வழங்கி அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேடன் மீது அடுத்தடுத்து புகார்கள்
கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில், கடந்த ஜூலை 30-ம் தேதி திருக்காக்கரை போலீசார் வேடன் மீது வழக்குப் பதிவு செய்தனர். அந்தப் புகாரில், தன்னைக் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்துப் பலமுறை பாலியல் உறவு கொண்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இந்த உறவு ஆகஸ்ட் 2021 முதல் மார்ச் 2023 வரை நீடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, வேடன் மீது மேலும் இரண்டு பெண்கள் பாலியல் புகார்களை அளித்துள்ளனர். இந்த இரு பெண்களும் கேரள முதலமைச்சரின் அலுவலகத்தில் புகார்களை அளித்தனர். இந்தச் சம்பவங்கள் 2020-2021 காலகட்டத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு பெண், சாதி இசை குறித்த ஆராய்ச்சி தொடர்பாக வேடனைத் தொலைபேசியில் அழைத்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், மற்றொரு பெண், வேடனின் இசையால் ஈர்க்கப்பட்டு அவருடன் பழகி, பின்னர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் புகார் அளித்துள்ளனர்.
முன்ஜாமீன்- உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்குகளைத் தொடர்ந்து, வேடன் தனக்கு முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 18-க்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வேடன் தலைமறைவானார். இதனால், அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லக்கூடும் எனக் கருதிய போலீசார், அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.
இதனை தொடர்ந்து, வேடனை கைது செய்ய உயநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இந்த நிலையில், வேடனின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அவருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும், வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி இவ்வழக்கின் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேடனின் பின்னணி
"நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." போன்ற சமூக அடக்குமுறைகளுக்கு எதிரான பாடல்கள் மூலம் வேடன் யூடியூப் தளத்தில் பிரபலமடைந்தார். 'மஞ்சும்மல் பாய்ஸ்' உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் அவர் பாடல்களைப் பாடியுள்ளார். அவரது பாடல்கள் தென் இந்தியா முழுவதும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், அவர் மீது அடுத்தடுத்து பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேடன் மீது அடுத்தடுத்து புகார்கள்
கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில், கடந்த ஜூலை 30-ம் தேதி திருக்காக்கரை போலீசார் வேடன் மீது வழக்குப் பதிவு செய்தனர். அந்தப் புகாரில், தன்னைக் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்துப் பலமுறை பாலியல் உறவு கொண்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இந்த உறவு ஆகஸ்ட் 2021 முதல் மார்ச் 2023 வரை நீடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, வேடன் மீது மேலும் இரண்டு பெண்கள் பாலியல் புகார்களை அளித்துள்ளனர். இந்த இரு பெண்களும் கேரள முதலமைச்சரின் அலுவலகத்தில் புகார்களை அளித்தனர். இந்தச் சம்பவங்கள் 2020-2021 காலகட்டத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு பெண், சாதி இசை குறித்த ஆராய்ச்சி தொடர்பாக வேடனைத் தொலைபேசியில் அழைத்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், மற்றொரு பெண், வேடனின் இசையால் ஈர்க்கப்பட்டு அவருடன் பழகி, பின்னர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் புகார் அளித்துள்ளனர்.
முன்ஜாமீன்- உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்குகளைத் தொடர்ந்து, வேடன் தனக்கு முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 18-க்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வேடன் தலைமறைவானார். இதனால், அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லக்கூடும் எனக் கருதிய போலீசார், அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.
இதனை தொடர்ந்து, வேடனை கைது செய்ய உயநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இந்த நிலையில், வேடனின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அவருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும், வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி இவ்வழக்கின் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேடனின் பின்னணி
"நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." போன்ற சமூக அடக்குமுறைகளுக்கு எதிரான பாடல்கள் மூலம் வேடன் யூடியூப் தளத்தில் பிரபலமடைந்தார். 'மஞ்சும்மல் பாய்ஸ்' உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் அவர் பாடல்களைப் பாடியுள்ளார். அவரது பாடல்கள் தென் இந்தியா முழுவதும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், அவர் மீது அடுத்தடுத்து பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.