போனி கபூர் தலைமையிலான பேவ்யூ புடானி ஃபில்ம்சிட்டி பிரைவேட் லிமிடெட், யமுனா எக்ஸ்பிரஸ் வே தொழில்துறை மேம்பாட்டு அதிகாரம் (YEIDA) உடன் இணைந்து உத்தரப்பிரதேசத்தில் பிரம்மாண்டமான திரைப்பட நகரம் உருவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டம் விரைவில் தொடங்க உள்ளது. முதல் கட்டத்தில் 13 முதல் 14 மேம்பட்ட திரைப்பட ஸ்டுடியோக்கள் மற்றும் 230 ஏக்கரில் ஒரு திரைப்பட நிறுவனம் ஆகியவை உருவாக உள்ளது.
இந்த திட்டம் எட்டு ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும். நொய்டா செக்டார் 21 இல் உள்ள திரைப்பட நகரத்திற்கான லே அவுட் திட்டத்தை போனி கபூர் சமர்ப்பித்துள்ளார் என்பதை யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (YEIDA) தெரிவித்துள்ளது.
முதல் கட்டத்திற்கு ரூ. 1,510 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இந்த கட்டமைப்பு மூன்று ஆண்டுகளில் முடிக்கப்பட வேண்டும். பின்னர், வர்த்தக கட்டமைப்புகள் உருவாக்கப்படுவதை YEIDA அனுமதிக்கும். இதில் திரைப்பட ஸ்டுடியோக்கள், திறனாய்வுக் கல்வி நிறுவனம் மற்றும் நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு குழுவினருக்கான வசதிகளுடன், படப்பிடிப்பு ஸ்டுடியோக்கள், பின் தயாரிப்பு அலகுகள், வர்த்தக மையம் மற்றும் திரைப்பட கல்வி நிறுவனம் ஆகியவை இதில் அடங்குகிறது.
படப்பிடிப்பு நிகழ்ச்சிகளை நேரடியாக பார்வையிடும் வசதி, சவுண்ட்-பிரூப் கண்ணாடி கொண்ட பார்வையிடும் காட்சி, உலகத் தரத்திலான கால் பந்தாட்ட மைதானம் போன்றவை திட்டத்தில் உள்ளன.
இந்த திட்டம் 5 முதல் 7 லட்சம் வேலை வாய்ப்புகளை நேரடியாக மற்றும் மறைமுகமாக உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம், YEIDA மற்றும் பேவ்யூ புடானி ஃபில்ம்சிட்டி பிரைவேட் லிமிடெட் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியது. 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று, YEIDA, போனி கபூர் தலைமையிலான குழுவிற்கு 230 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்தது.
2025 ஆம் ஆண்டு மே 30 க்கு முன்பாக, அடிக்கல் விழா நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம், உத்தரப்பிரதேசத்தை திரைப்படத் துறையில் முன்னணி மாநிலமாக மாற்றும் நோக்கில், போனி கபூர் மற்றும் மாநில அரசின் முக்கிய முயற்சியாகும்.
இந்த திட்டம் எட்டு ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும். நொய்டா செக்டார் 21 இல் உள்ள திரைப்பட நகரத்திற்கான லே அவுட் திட்டத்தை போனி கபூர் சமர்ப்பித்துள்ளார் என்பதை யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (YEIDA) தெரிவித்துள்ளது.
முதல் கட்டத்திற்கு ரூ. 1,510 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இந்த கட்டமைப்பு மூன்று ஆண்டுகளில் முடிக்கப்பட வேண்டும். பின்னர், வர்த்தக கட்டமைப்புகள் உருவாக்கப்படுவதை YEIDA அனுமதிக்கும். இதில் திரைப்பட ஸ்டுடியோக்கள், திறனாய்வுக் கல்வி நிறுவனம் மற்றும் நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு குழுவினருக்கான வசதிகளுடன், படப்பிடிப்பு ஸ்டுடியோக்கள், பின் தயாரிப்பு அலகுகள், வர்த்தக மையம் மற்றும் திரைப்பட கல்வி நிறுவனம் ஆகியவை இதில் அடங்குகிறது.
படப்பிடிப்பு நிகழ்ச்சிகளை நேரடியாக பார்வையிடும் வசதி, சவுண்ட்-பிரூப் கண்ணாடி கொண்ட பார்வையிடும் காட்சி, உலகத் தரத்திலான கால் பந்தாட்ட மைதானம் போன்றவை திட்டத்தில் உள்ளன.
இந்த திட்டம் 5 முதல் 7 லட்சம் வேலை வாய்ப்புகளை நேரடியாக மற்றும் மறைமுகமாக உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம், YEIDA மற்றும் பேவ்யூ புடானி ஃபில்ம்சிட்டி பிரைவேட் லிமிடெட் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியது. 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று, YEIDA, போனி கபூர் தலைமையிலான குழுவிற்கு 230 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்தது.
2025 ஆம் ஆண்டு மே 30 க்கு முன்பாக, அடிக்கல் விழா நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம், உத்தரப்பிரதேசத்தை திரைப்படத் துறையில் முன்னணி மாநிலமாக மாற்றும் நோக்கில், போனி கபூர் மற்றும் மாநில அரசின் முக்கிய முயற்சியாகும்.