K U M U D A M   N E W S

AI

'எதற்கெடுத்தாலும் ஆர்.எஸ்.எஸ்.ஸை குறை சொல்வதா?'.. தமிழிசை பரபரப்பு பேச்சு!

''பள்ளிக்கல்வித்துறை அனுமதி கொடுக்காமல் நிகழ்ச்சி நடந்ததா? பள்ளிக்கல்வித்துறை, தலைமை ஆசிரியரை பலி ஆடாக ஆக்குவதற்கு பதிலாக அமைச்சர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்வது பகுத்தறிவுக்கு எதிரானது அல்ல'' என்று தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

இஷ்டபடி ரீல் சுற்றிய மகா விஷ்ணு.. சொன்னது ஒன்று செய்தது ஒன்று

தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள். மாணவர்கள் மத்தியில் என்ன பேச வேண்டும் என்று சொல்லியதற்கு மாறாக உளறித் தள்ளியதே சர்ச்சைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

Koyambedu Flower Market: வியாபாரி - அதிகாரிகள் இடையே வாக்குவாதம்

சென்னை கோயம்பேடு பூச்சந்தையில், வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Kanguva Release Date: சூர்யாவின் கங்குவா புதிய ரிலீஸ் தேதி... சிக்கலில் சிவகார்த்திகேயனின் அமரன்..?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்துக்காக, சூர்யா நடித்துள்ள கங்குவா அக்டோபர் 10ம் தேதி ரிலீஸில் இருந்து பின்வாங்கியது. இந்நிலையில், கங்குவா படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

நில மோசடி வழக்கு.. சிபிஐ அதிகாரிகள் சோதனை

நீலாங்கரை நிலமோசடி வழக்கு தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அண்ணாநகரில் காவல் ஆய்வாளர் ஆனந்தபாபு வீடு மற்றும் சாஸ்திரி நகர், பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், வேளச்சேரியிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. 

அரசு பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் - பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு

சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில் 2 அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் விளக்கம் அளிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார் 

பிற்போக்கு கருத்துகளை கேள்வி கேளுங்கள் - மேடையில் விளாசிய அன்பில் மகேஷ்

கல்வியே சமத்துவ மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் எனும் நிகழ்ச்சி சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இதில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். 

அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம்... அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி

சென்னையில் அரசுப்பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில் சொற்பொழிவு ஆற்றிய மகாவிஷ்ணு, ஆசிரியரை தரக்குறைவாக பேசியது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்  

Rain Update: சென்னை மக்களை Chill செய்த மழை... தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு சம்பவம் இருக்கு!

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தவெக மாநாடு... திமுகவுக்கு பயம்.. - வெளிப்படையாக சொன்ன நயினார் நாகேந்திரன்

அதிமுக மற்றும் பாஜக இடையே மீண்டும் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

"பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்" - ராகுல் காந்தி

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை விழுந்து நொறுங்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மதுரையில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்

மதுரை மாவட்டத்தில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி. பரிசோதனையில் டெங்கு உறுதியான நிலையில் இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமின்

சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது

BREAKING | ஆம்ஸ்ட்ராங் விவகாரம் - விரைவில் குற்றப்பத்திரிகை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக காவல் ஆணையர் அருண் தகவல் அளித்துள்ளார்

"புதிய கல்விக் கொள்கைக்கு மாற்று கிடையாது" - ஆளுநர் ஆர்.என்.ரவி

புதிய கல்விக் கொள்கைக்கு மாற்று கிடையாது, அதனை அனைவரும் ஏற்க வேண்டும் - சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

"முதல் முறை குற்றவாளிக்கு சிறையில் தனி இடம்"

சிறையில் முதல் முறை குற்றவாளிகளை தனியாக வைப்பதற்கு திட்டங்கள் ஏதும் உள்ளதா? என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது

பள்ளிகளில் நாப்கின் - நீதிமன்றம் அதிருப்தி

அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் பராமரிப்பு தொடர்பான உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துக் கொண்ட வழக்கில் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு அதிருப்தி

THE GOAT FDFS விஜய் ரசிகர்கள் அட்டகாசம்

G.O.A.T திரைப்படம் வெளியான நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் அட்டகாசம். தவுட்டுச்சந்தை முதல் பெரியார் பேருந்து நிலையம் வரை வரை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி உலா வந்ததால் மக்கள் அவதியுற்றனர்

GOAT Vijayakanth: கேப்டனுக்கு வந்த சோதனையா இது..? கோட் படத்தின் விஜயகாந்த் AI வெர்ஷன் இதுதானா!

விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் விஜயகாந்த் ஏஐ வெர்ஷனில் நடித்துள்ள நிலையில், அதனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

நிறுத்தப்பட்ட காட்சி.. விஜய் ரசிகர்கள் செயலால் பரபரப்பு..

புதுக்கோட்டையில் கோட் படம் திரையிட்ட திரையரங்கின் லென்ஸ் பழுதானதால் ரசிகர்கள் கூச்சலிட்டனர். இதனால் திரையரங்கில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான வழக்கில் மேலும் ஒருவர் கைது

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான நிலமோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆயுள் முழுக்க ஜெயில் தானா? செந்தில்பாலாஜிக்கு துரோகம் இழைத்ததா திமுக..? முக்கிய புள்ளி சொல்வது என்ன?

Senthilbalaji Bail Issues: செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் என்ன சிக்கல்? திமுக அவரை கைவிட்டுவிட்டதா? கடைசிவரை அவர் சிறைவாழ்க்கைத்தான் வாழ வேண்டுமா? என்பது குறித்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆலோசகராக பணியாற்றிய கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

“கர்ப்பமானால் பொறுப்பேற்க முடியாது” - ஒப்பந்தம் போட்டு பாலியல் பலாத்காரம் செய்த நபர்

Mumbai Live In Relationship Case News in Tamil : மும்பையில் பாலியல் பலாத்கார வழக்கில், இளம்பெண் தன்னுடன் செய்துகொண்ட 7 நிபந்தனைகள் அடங்கிய, திருமண ஒப்பந்தத்தை காட்டி ஜாமின் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

2020ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு மீது தமிழக அரசு, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 31 பேர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Vetrimaaran: தமிழ் சினிமாவின் தனித்துவம்... திரைமொழியின் அசுரன்... வெற்றிமாறனின் வெற்றிப் பயணம்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன், இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இதுவரை 7 படங்கள் இயக்கியுள்ள வெற்றிமாறன், 4 தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளார். திரை மொழியின் அசுரனான வெற்றிமாறனின் வெற்றிப் பயணம் குறித்து இப்போது பார்க்கலாம்.