K U M U D A M   N E W S
Kumudam Ad

"லக்கி பாஸ்கர்" படபாணியில் கொள்ளையடித்த வங்கி மேலாளர்.. வயதானவர்களின் வைப்பு நிதியை குறி வைத்து மோசடி!

லக்கி பாஸ்கர் படத்தில் யாரிடமும் சிக்காமல் கோடிக்கணக்கான ரூபாய் வங்கி பணத்தை மோசடி செய்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து, வங்கி மேலாளர் நூற்றுக்கணக்கான கோடி ரூபாயுடன் வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்தது போன்று, சென்னை அண்ணா நகரை சேர்ந்த இண்டஸ்இண்ட் வங்கி கிளை மேலாளர் லக்கி மஞ்சுளா கைவரிசை காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போல் ‘ப்ரீடம்’ படம் இருக்காது.. நடிகர் சசிகுமார்

‘ப்ரீடம்’ திரைப்படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் போல் காமெடியாக இருக்காது என்று நடிகர் சசிகுமார் தெரிவித்தார்.

நீரவ் மோடி வங்கி மோசடி வழக்கு: சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது!

இந்தியாவை உலுக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் காணப்படும் வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் தீபக் மோடி, தற்போது அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் அலுமினியம் மற்றும் தாமிர தொலைநோக்கு ஆவணங்கள் வெளியீடு!

இந்தியா 2047-க்குள் அலுமினிய உற்பத்தியை ஆறு மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் தொலைநோக்கு ஆவணம் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் வெளியிடப்பட்டது. அதேபோல், தாமிரத்தின் தேவையும் 2047-க்குள் ஆறு மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை பூர்த்தி செய்யும் வகையில், 2030-க்குள் 5 மில்லியன் டன் தாமிர உருக்கு மற்றும் சுத்திகரிப்பு திறன் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசுடன் பிரதமர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து இலங்கை அரசுடன் பிரததமர் மோடி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

ஜூலை 21 முதல் தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா லிபெட்ஸ்கில் உக்ரைன் டிரோன் தாக்குதல்.. மீட்பு பணிகள் தீவிரம்!

ரஷ்யாவின் லிபெட்ஸ்க் பிராந்தியத்தில் இன்று அதிகாலை உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும், ஆளுநர் இகோர் ஆர்தமோனோவ் தெரிவித்துள்ளார்

பிரதமர் நரேந்திர மோடி – 5 நாடுகளுக்கு 8 நாள் சுற்றுப்பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜூலை 2 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை 8 நாள் சுற்றுப்பயணமாக வரை 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணம் இருநாட்டுகளின் உறவுகள், பொருளாதார ஒத்துழைப்புகள் மற்றும் உலகளாவிய நிலைப்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் அமைந்துள்ளது.

கோவை பேரூர் மடத்தில் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா.. மோகன் பகவத் பங்கேற்பு

கோவை பேரூர் மடத்தில் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், நீரை சேமிக்க வேண்டும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் அழிவிற்கு முன்பு நாம் பல்வேறு முன்னெடுப்புகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மனைவியின் இன்ஸ்டா ரீல்ஸ் மோகம்.. கணவன் செய்த கொடூரம்!

கர்நாடகாவில் மனைவி தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்ததால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.