காமராஜர் பிறந்தநாள்.. புகழாரம் சூட்டிய தலைவர்கள்
காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி ஜூலை 27 மற்றும் 28 தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு வருகை தருவதாகவும், கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புழல் பகுதியில் 40 கோடி மோசடியில் ஈடுபட்ட நபர் தான் சொந்தமாக வாங்கிய இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சென்னையில் இளைஞரை கடத்திய மூன்று சட்டக் கல்லூரி மாணவர்களை சென்னை எழும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைன் பண மோசடி விவகாரத்தில் பணத்தை வாங்குவதற்கு கடத்தி கட்ட பஞ்சாயத்து செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் 'கல்லுக்குள் ஈரம்' மற்றும் 'இதயத்தை திருடாதே' ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை அருணா தொடர்பான அமலாக்கத்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணாவின் கணவரும், தொழிலதிபருமான மோகன் குப்தாவின் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டாரா என அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
திமுக ஆட்சியில் பட்டியல் இனமக்கள் படும் துன்பத்தைப்பற்றி பேசவேண்டிய விசிக பேசாமல், மௌனம் காக்கிறது என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
அஜித்குமார் கொலை வழக்கில், நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த நிகிதா மீது சென்னையிலும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பள்ளி வேன் மீது, சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் மோதி விபத்துக்குள்ளானதில், 2 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், வேன் ஓட்டுநர் தான் விபத்துக்கு காரணம் என்றும், வேகமாக இயக்கியதாகவும், ரயில்வே தண்டவாளத்திற்குள் நுழைந்ததாகவும் ரயில்வே தரப்பில் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகிவுள்ளது.
OLA நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக போலி பணியாணை வழங்கி 56 நபரிடம் ரூ. 22 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் ஒரு காவலர் 12 ஆண்டுகளாகப் பணிக்கு வராமல் ரூ.28 லட்சம் சம்பளம் பெற்ற நூதன மோசடி அம்பலமாகியுள்ளது.