K U M U D A M   N E W S

ஜம்மு-காஷ்மீர் எதிரொலி: நீலகிரியில் கண்காணிப்பு பணி தீவிரம்

ஜம்மு-காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்.. தீவிரவாதிகள் குறித்த தகவலுக்கு ரூ.20 லட்சம் சன்மானம்

ஜம்மு-காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்.. 3 மணிநேரம் தாமதமானதால் உயிர் பிழைத்த தமிழர்கள்

மூன்று மணி நேரம் முன்னதாக சென்றிருந்தால் தாங்களும் பலியாகியிருப்போம் என காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கம..கம..விருந்து வைத்த இபிஎஸ்...புறக்கணித்த செங்கோட்டையன்

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு இபிஎஸ் வைத்த விருந்தை செங்கோட்டையன் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

“மதத்தின் பெயரால் கொலை செய்வது...” பஹல்காம் தாக்குதல் குறித்து முகமது சிராஜ் போட்ட பதிவு

பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிக கொடூரமான செயல் என கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் எதிரொலி மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதகளில் துப்பாக்கி ஏந்திய பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: நாடு திரும்பிய மோடி.. அமைச்சர்களுடன் ஆலோசனை

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: இந்திய அரசின் துப்பாக்கிகள் தூக்கம் கலையவேண்டும்-வைரமுத்து

ஜம்மு-காஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கவிஞர் வைரமுத்து சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்.. தமிழ்நாடு அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து தமிழகத்தில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

“தாமரை மலரும், ஆனால் இலைகளை அழுத்தாது” - டிடிவி தினகரன்

இலைகளுக்கு மேலே தாமரை மலரும், ஆனால் இலையை அழுத்தாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பதற்றம் அதிகரிப்பு...பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

UPSC தேர்வு...அசத்திய நான் முதல்வன் திட்ட மாணவர்கள்..வாழ்த்திய முதல்வர்

வருங்காலங்களில் இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது

பழைய ஓய்வூதிய திட்டம்.. உரிய நேரத்தில் முடிவு.. தங்கம் தென்னரசு பதில்

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கோரிக்கையில் உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கூலி தொழிலாளியை தாக்கிய விவகாரம்: பாஜக பிரமுகரை தட்டி தூக்கிய போலீசார்

கூலி தொழிலாளியை தாக்கிய விவகாரத்தில் பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தேவையில்லை-தமிழக அரசு திட்டவட்டம்

தமிழகத்தில் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்கான சட்டம் இயற்றப்படாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

’இரட்டை இலக்கு தாங்க..இல்லாக்காட்டி போங்க...’ - சீட்டுக்கு செட்டிங்..? காத்திருக்கும் காம்ரேட்கள்..! தலைவலியில் தலைமை?

தமிழக அரசியல் களத்தில் ’ஆட்சி, அதிகாரத்தில் பங்கு’ என கொளுத்திப்போடப்பட்ட திரி அறிவாலயத்தில் புகையத் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், விசிக, காங்கிரஸை தொடர்ந்து காம்ரேட்களும் பல டிமாண்டுகளை திமுக தலைமையிடம் வைப்பதாக கூறப்படுகிறது. அந்த டிமாண்ட் என்ன? திமுக எடுக்கப்போகும் முடிவு என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

மின்வாரிய ஊழியரிடம் மாமுல் கேட்ட திமுக நிர்வாகி.. ஆத்திரத்தில் தாக்குதல்

மின்வாரிய ஊழியர்களை மாமூல் கேட்டு தாக்கிய திமுக நிர்வாகி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து ஜாமினில் விடுவித்தனர்.

இணைந்த கரங்களாக செயல்படுவோம்- மல்லை சத்யா அறிக்கை

முதன்மைச் செயலாளர் துரை வைகோவும், தானும் இணைந்த கரங்களாக தலைவர் வைகோவிற்கும், கழகத்திற்கும் துணையாக செயல்படுவோம் என்று மல்லை சத்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ.. மதிமுக கூட்டத்தில் அறிவிப்பு

மதிமுக முதன்மைச் செயலர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை திரும்பப்பெறுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.

குடிநீரில் எந்த கலப்படமும் இல்லை...திருச்சி மாநகராட்சி மேயர் விளக்கம்

சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கின்றனர் என மேயர் கூறினார்.

ஜல்லிக்கட்டு: விளம்பர விளையாட்டாக மாற்றிய திமுக.. ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை விளம்பர விளையாட்டாக திமுகவினர் மாற்றிவிட்டார்கள் என்று சட்டமன்ற எதிக்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

ஆளுநரை தபால்காரர் என முதல்வர் கூறுவதா? நயினார் நாகேந்திரன் ஆதங்கம்

ஆளுநர் என்பவர் மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் அப்படி இருக்கையில் ஆளுநரை தபால்காரர் என கூறுவது தமிழக முதலமைச்சருக்கு அழகல்ல என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு தமிழகம் தான் ”வாட்டர்லூ”- MP திருச்சி சிவா சூளுரை

”தமிழகத்திற்கு போர் அறிவிப்பு வந்துவிட்டது. ஒரு புதிய படையெடுப்பு நடந்திருக்கிறது, பதுங்கி இருந்த பகைக்கூட்டம் வேறு சிலரை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறது. எத்தனை படையை கூட்டி வந்தாலும் சந்திப்பதற்கு தமிழ்நாடு தயாராக இருக்கிறது” என திமுக எம்பி திருச்சி சிவா பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.

என்னோட ஃபோன்ல இருந்து எல்லாத்தையும் வாட்ச் பண்ணிட்டு இருக்காங்க.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

இனியொருமுறை தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சனாதான தர்மத்தை நாம் காப்பாற்ற முடியாது

நீட் தேர்வு: அதிமுக போராடுவது போல் நாடகமாடுகிறது - அமைச்சர் கோவி.செழியன்

தமிழகத்தில் நீட் தேர்வை அனுமதித்த அதிமுக, இப்போது போராடுவது போல் நாடகமாடுகிறது என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.