K U M U D A M   N E W S

சென்னை

இந்தியாவிலேயே தமிழக காவல்துறை தான்  சிறப்பாக செயல்படுகிறது - டிஜிபி சங்கர் ஜிவால்

போதைப் பொருளை தடுக்கும் பணியில் இந்தியாவிலேயே தமிழக காவல்துறை தான்  சிறப்பாக செயல்படுகிறது என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 

ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் இயக்குவது சட்டவிரோதம் - மோட்டார் வாகன விபத்து வழக்கு தீர்ப்பாயம் உத்தரவு

முறையான ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் மூலம் 3 சக்கர பேட்டரி குப்பை வாகனத்தை இயக்குவது சட்டவிரோதம் எனத் தெரிவித்த மோட்டார் வாகன விபத்து வழக்கு தீர்ப்பாயம், குப்பை வாகனம் மோதி காயமடைந்த சிறுமிக்கு ஒரு லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

இசையமைப்பாளர் தேவா இசை நிகழ்ச்சி.. போக்குவரத்து மாற்றம்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இசையமைப்பாளர் தேவா இசை நிகழ்ச்சி நடைபெறுவதை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 

தனியாருக்கு பாதுகாப்பு வழங்கும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பொதுமக்கள் வரிப் பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறையினர் பொது மக்களுக்கு தான் சேவை செய்ய வேண்டுமே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறையினரை தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும், டி.ஜி.பி.க்கும் உத்தரவிட்டுள்ளது

சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார்... பிப்ரவரி 19-ல் தீர்ப்பு..!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யக்கோரிய வழக்கை வரும் 19ஆம் தேதி விசாரித்து அன்றே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நிற்காமல் சென்ற பேருந்து... தட்டிகேட்ட பயணியை தாக்கிய டைம் கீப்பர்... போலீசார் தீவிர விசாரணை..!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்காமல் சென்றதால் டைம் கீப்பரிடம் தட்டிக்கேட்ட பயணி மீது தாக்குதல் நடத்தியது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலியல் புகார்களை விசாரிக்க தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை- அன்பில் மகேஸ் தகவல்

பாலியல் புகார் வந்தால் உடனே நேரடி ஆய்வுக்கு செல்ல வேண்டும் என்றும் பாலியல் புகார்களை முறையாக விசாரிக்க தவறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

பாடல்களுக்கு உரிமம் கோரும் வழக்கு.. உயர்நீதி மன்றத்தில் இளையராஜா ஆஜர்

பாடல்களுக்கு உரிமை கோரும் வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா நேரில் ஆஜரானார்.

பெண் காவலருக்கு பாலியல் துன்புறுத்தல்.. இணை ஆணையர் மகேஷ் குமார் சஸ்பெண்ட்

பெண் காவலர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த குற்றச்சாட்டில் சென்னை போக்குவரத்து காவல் துறை வடக்கு மண்டல இணை ஆணையர் மகேஷ் குமாரை சஸ்பெண்டு செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது.

மாநகர பேருந்தை கடத்தி விபத்து ஏற்படுத்திய நபரால் பரபரப்பு.. அதிரடி காட்டிய போலீசார்

திருவான்மியூர் பணிமனையில் இருந்து மாநகரப் பேருந்தை கடத்தி விபத்தை ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.