K U M U D A M   N E W S

சென்னை

நேற்று இறக்கம் இன்று ஏற்றம்! இன்றைய தங்கம் விலை என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.63,840க்கு விற்பனை.

பாலியல் புகார் - இணை ஆணையர் சஸ்பெண்ட்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இணை ஆணையர் மகேஷ் குமார் பணியிடை நீக்கம்.

அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்.. சென்னையில் பரபரப்பு

மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை.

கார் ஓட்டுநரின் மனைவிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி.. முன்னாள் பாமக நிர்வாகி கைது

கார் ஓட்டுநரின் மனைவிக்கு  அரசு ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக  பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் மீது போலீசார் 6 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

சென்னை எழிலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள எழிலக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.

சென்னை எழிலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

சென்னை மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள எழிலக வளாகத்துக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் நிலவும் தொடர் பனிமூட்டம்.. மக்கள் கடும் அவதி

கோடைக்காலம் தொடங்கிய நிலையிலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

சீமானுக்கு திரள்நிதி கொழுப்பு! மைக்கை பார்த்தால் உளறுவார்... திரண்டு வந்த தவெக படை!

விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பை பணக்கொழுப்பு என விமர்சித்த சீமானை, தவெக நிர்வாகிகள் சுளுக்கெடுத்து வருகின்றனர். சீமானுக்கு திரள்நிதி கொழுப்பு என்றும், மைக்கை பார்த்தால் உளறுவது தான் அவரது வழக்கம் எனவும் அடுத்தடுத்து அட்டாக் செய்து வருகின்றனர். அதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்....

மீண்டும் மீண்டுமா..? புதிய பிரச்சனையில் விஜய் விளாசும் திருநங்களைகள்

தமிழக வெற்றிக் கழகத்தில் 28 அணிகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதில் திருநர் அணி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக வெளியிடபப்டாத அறிக்கை விஜய்க்கு ஏற்படுத்தியுள்ள புதிய நெருக்கடி என்ன? இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்...

பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட மேய்க்கால் நிலம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தற்போது விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் 390 ஏக்கர் பரப்பு மேலும் விரிவடையாமல் பார்த்துக் கொள்ளவும் வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு