TN Rains Update : உக்கிரமடையும் மழை......7 மாவட்டங்களுக்கு அலர்ட்
Tamil Nadu Rain Update Today : தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Rain Update Today : தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Water Canel Issue in Ramanathapuram : ராமநாதபுரத்தில் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார இளைஞர்கள் தாமாக முன் வந்து அனுமதி கோரியும் ஏன் அனுமதி வழங்கவில்லை. மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
NIA Raids in Chennai : பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹீரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் சென்னை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதல் NIA சோதனை நடத்தியது. இந்நிலையில் சென்னை வெட்டுவாங்கேணியில் முகமது ரியாஸ் மற்றும் சையது அலி ஆகியோர் வீடுகளில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றுள்ளது
Actress Trisha Krishnan Case : மதில்சுவர் தொடர்பாக அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னையில் இருதரப்பும் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நடிகை திரிஷா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
Mysterious Fever in Madurai : மதுரையில் காய்ச்சல் காரணமாக ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பருவ மழை பெய்யும் காலங்களில் காய்ச்சல் அதிகமாகும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது
Nagapattinam School Student Dies in Govt Bus Accident : நாகை அருகே குருக்கத்தி பைபாஸ் சாலையில் அரசு பேருந்து மோதி 11ம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவியுடன் வந்த அவரது தம்பி படுகாயங்களுடன் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
CM Stalin Visit: சென்னை கொளத்தூர் பகுதியில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு சென்ற முதலமைச்சர் கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
Tirupati Laddu Issue : திருப்பதிக்கு நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்கு மத்திய சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மும்பை காவல் அதிகாரி என கூறி ஆள் மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட நபர்களை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
NIA Raids in Chennai : சென்னை, புதுக்கோட்டை, கன்னியாகுமரியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹீரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் NIA சோதனை
Krishna River Water Supply in Chennai : கிருஷ்ணா நதி நீரின் வரத்தை பொறுத்து சென்னை குடிநீருக்காக திறக்கப்படும் என நீர்வளத்துறை தகவல். கண்டலேறு அணையில் இருந்து 1,300 கனஅடி நீர் திறப்பு, 5 நாட்களுக்கு பிறகு பூண்டி நீர்தேக்கத்தை வந்தடைந்தது
Tamil Nadu Players Won in Chess Olympiad 2024 : செஸ் ஒலிம்பியாட்டில் வென்ற தமிழகத்தின் தங்க மகன், மகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு. பலமான எதிராளிகளை சமாளித்து வென்றது மன நிறைவாக இருப்பதாக கூட்டாக பேட்டி.
Petrol Bomb Thrown In ADMK Secretary House : தேனி மாவட்டம் சின்னமனூரில் அதிமுக நகர செயலாளர் பிச்சைக்கனி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு. நள்ளிரவு பிச்சைக்கனி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு மர்மநபர்கள் தப்பியோடியதால் பரபரப்பு
NIA Raids in Chennai : சென்னையில் ராயப்பேட்டை, தாம்பரம் பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹீரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் NIA சோதனை
Rapido Driver Robbed By Police at Chennai : வேலியே பயிரை மேய்ந்தது போல சிறப்பு உதவி ஆய்வாளர் மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட ரேபிடோ ஓட்டுனர் வேதனை தெரிவித்துள்ளார்.
மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் பிரிவு 116ன் படி, போக்குவரத்துப் பலகைகளை அமைக்க அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அனுமதியின்றி பலகைகள் அல்லது பொருட்களை வைத்து, பொதுச் சாலைகளுக்கு இடையூறாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
‘’கண்ணப்பர் திடலில் வசிக்கும் ஒரு பகுதி மக்களுக்கு மட்டுமே வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 40 வருடங்களாக வசிக்கும் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கவில்லை’’ என்று ஒருபகுதி மக்கள் குற்றம்சாட்டினார்கள்.
லட்டில் கலப்படம் செய்திருந்தால் நானும் என் குடும்பமும் நாசமாக போகவேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் சபதம் எடுத்துள்ளார்.
Selvaperunthagai Press Meet: பகுஜன் சமாஜ் மாநிலச் செயலாளர் ஜெய்சங்கரின் நடவடிக்கையால் தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சொகுசு கார்களின் கண்காட்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மட்டும் வழக்கமான ஒன்றாக இருந்துவந்த சொகுசு கார் கண்காட்சிகள் தற்போது சென்னையிலும் நடைபெற தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியில் BMW, Benz, Audi, Mustang உள்ளிட்ட கார்களின் உயர் ரக மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக மாறுதல்கள் செய்யப்பட்டு மெருகேற்றப்பட்ட கார்களின் அணிவகுப்பும் திரட்டிருந்த இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை ரசித்து பார்த்ததுடன் இளைஞர்கள் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
சென்னையில் நடைபெற்ற சொகுசு கார்களின் கண்காட்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மட்டும் வழக்கமான ஒன்றாக இருந்துவந்த சொகுசு கார் கண்காட்சிகள் தற்போது சென்னையிலும் நடைபெற தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியில் BMW, Benz, Audi, Mustang உள்ளிட்ட கார்களின் உயர் ரக மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக மாறுதல்கள் செய்யப்பட்டு மெருகேற்றப்பட்ட கார்களின் அணிவகுப்பும் திரட்டிருந்த இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை ரசித்து பார்த்ததுடன் இளைஞர்கள் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்பதால் அவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்ற சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று ஜாமின் மனுக்களை தள்ளுபடி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பதற்கு விதிமுறைகளை உருவாக்கிய பின்னரும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்ககுவதில் ஏன் தாமதம் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வீடுகளில் விளக்கேற்றி மந்திரம் படித்தால் கலப்பட நெய்யில் தயாரிக்கப்பட்ட லட்டை சாப்பிட்ட தோஷம் விலகும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள நுழைவு வாயில், மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள நுழைவு வாயில் ஆகியவற்றை இடித்து அகற்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.