K U M U D A M   N E W S

முதலமைச்சர் உத்தரவுக்குப் பிறகும்.. நிற்காமல் செல்லும் பேருந்து ?

சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தில் முதலமைச்சர் உத்தரவின் படி அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பதில்லை என கல்லூரி மாணவிகள் வேதனை தெரிவித்தனர். கடந்த வாரம் இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோழபுரத்தில் தனியார் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, மாணவிகள் தங்கள் கல்லூரி முன்பு அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு.. நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை

காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அப்போது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 மீனவர்கள் காயம் அடைந்தனர்

அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்

தை அமாவாசை தினத்தையோட்டி ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி சாமி தரிசனம்

100வது ராக்கெட்டை ஏவி சாதனை படைத்த இஸ்ரோ

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான GSLV-F15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் பாய்ந்த NVS-02 செயற்கைக்கோள் மற்ற செயற்கைக் கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.. பக்தர்கள் சாமி தரிசனம்...!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தெப்ப திருவிழா இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்.. 17 பேர் உயிரிழப்பு..!

உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட தீடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் காயமைடந்த நிலையில், 17 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்... வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது GSLV-F15

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான GSLV-F15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் பாய்ந்த NVS-02 செயற்கைக்கோள் மற்ற செயற்கைக் கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

”அனைத்து மக்களும் வேறுபாடு பார்க்காமல் மனிதாபிமானத்தோடு வாழ வேண்டும்”

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழாவை கொடியேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட அவர், வைர விழா பெருந்திரளணி குறித்த அஞ்சல்தலை மற்றும் அஞ்சல் உறையை வெளியிட்டார்.

2026 தேர்தல் கணக்கு... விஜய்க்கு எதிராக அஜித்... திமுகவின் பலே ஐடியா!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யின் என்ட்ரி, திமுகவுக்கு தலை வலியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், இதற்கெல்லாம் அசராத திமுக, விஜய்க்கு எதிராக அஜித்தை வைத்து ஒரு சம்பவம் செய்ய பிளான் செய்து வருகிறதாம். அது என்ன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்......

பட்டாசு ஆலையில் வெடி விபத்து... உள்ளே இருந்தவர்களின் நிலை?

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மன்குண்டாம்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து.

"பெரியாரைப் பற்றி பேசி பெரிய தலைவராக சீமான் முயற்சி" –CPI முத்தரசன்

"சூரியனைப் பார்த்து நாய் குறைத்தால் சூரியனுக்கு பாதிப்பில்லை"

மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

காரைக்கால் மீனவர்கள் 13 பேருக்கும், பிப்ரவரி 10ம் தேதி வரை நீதிமன்ற காவல் இலங்கை நீதிமன்றம் உத்தரவு.

அயோத்திக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம்.. அறக்கட்டளை அதிரடி அறிவிப்பு

மகா கும்பமேளாவிற்கு வரும் பக்தர்கள் அயோத்திக்கு வருவதால் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவி வருகிறது. இதனால் அடுத்த 15 நாட்களுக்கு அயோத்திக்கு பக்தர்கள் வரவேண்டாம் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா

ஐசிசியின் சிறந்த வீரருக்கான 'சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி' விருதை வெல்லும் ஐந்தாவது இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார். 

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை.. சட்டம் அமலுக்கு வந்தது

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டம் கடந்த 25-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

பிப்.1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மீண்டும் புலன் விசாரணை... சர்ச்சையில் சிக்கும் பெரியார் பல்கலை. துணைவேந்தர்

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீக்கப்பட்டதன் எதிரொலி.

அரசு நிகழ்ச்சியில் சீருடையில் வந்து அசத்திய அமைச்சர் 

மணப்பாறையில் நடைபெறும் பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழாவை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்.

பெண்ணை பின் தொடர்ந்தால்.... புதிய சட்டம் அமல்

2வது அல்லது தொடர்ச்சியான தண்டனையாக 10 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

மகப்பேறு சிகிச்சைக்கு சென்ற பெண்ணின் வயிற்றில் பேண்டேஜ்.. 13 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

மகப்பேறு அறுவை சிகிச்சைக்கு பின் வயிற்றில் பேண்டேஜை வைத்து தைத்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 13 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி தனியார் மருத்துவமனைக்கும், சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மினி பேருந்து டிக்கெட் கட்டணத்தில் மாற்றம்

புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தின் கட்டணத்தை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவு.

கோவையில் IT ஊழியர்கள் பணிநீக்கம் – அண்ணாமலை விமர்சனம்

தமிழக அரசு முதலீடுகளை பாதுகாப்பதில்லை - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்.

தூங்கிக்கொண்டிருந்த போது நிகழ்ந்த பயங்கரம்

தாத்தாவுடன் படுத்திருந்த பேரன் வெட்டிக்கொலை.

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்.. மோடியுடன் விவாதித்ததாக டிரம்ப் தகவல்

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசிய நிலையில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார்.

நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்தும் திமுக.. அண்ணாமலை ஆதங்கம்

நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக, சென்னை மாநகராட்சியையும், பள்ளிக் குழந்தைகளையும் அதற்குப் பயன்படுத்த முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.