K U M U D A M   N E W S

தமிழ்நாடு

குழந்தைகளின் உயிரைக் காவு வாங்கிய எலி மருந்து... குற்றவாளிக்கு போலீசார் வலைவீச்சு!

சென்னையில் எலி மருந்தால் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமான நிறுவனத்தில் 3 நாட்களாக வேளாண் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம்: தமிழ்நாடு அரசுக்கு உயரிநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசும் கட்டண நிர்ணயக் குழுவும் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Aadhav Arjuna: ED சோதனை நிறைவு.. “என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை” - ஆதவ் அர்ஜூனா அறிக்கை

 விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் ஆர்ஜுனா வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்த நிலையில், என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடங்கிய கார்த்திகை – களைகட்டிய கோவில்கள்

கார்த்திகை மாதத்தின் முதல் நாளான இன்று கோவையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

ஆந்திராவில் நடிகை கஸ்தூரி பதுங்கல்?-தனிப்படை போலீசார் தீவிர தேடுதல்

ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் உதவியோடு நடிகை கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.

மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரம்... விக்னேஷ் தாய் மீது புகார்..!

அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரத்தில், தன்னை பற்றி அவதூறு பரப்பி வரும் பிரேமா மற்றும் அவரது மகன்  லோகேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தனியார் மருத்துவர் ஜேக்கலின் மோசஸ் புகார் அளித்துள்ளார்.

அமலுக்கு வந்த முதல் நாளிலேயே அடாவடி.. வசூலில் இறங்கிய டாஸ்மாக் ஊழியர்

பில்லிங் சிஸ்டம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே அரசு மதுபான கடைகளில் கூடுதலாக மதுபான பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலித்து வருவது மது பிரியர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திமுக, அதிமுகவுக்கு இதே வேலையா போச்சு.. இருவரும் சளைத்தவர்கள் அல்ல - நீதிபதி காட்டம்

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக  கூறிக் கொண்டு திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சியினரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை கூறுகின்றனரே தவிர, நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

காவல் நிலையம் எதிரேயே வங்கியில் கொள்ளை முயற்சி.. பூட்டை உடைத்து ஏமாந்த கொள்ளையன்

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ வங்கி பூட்டை உடைத்தும், பக்கத்தில் உள்ள கடையின் பூட்டை உடைத்தும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரண்டு கட்சிக்கும் அக்கறை இல்லை; எங்களுக்கு வேறு வேலை இல்லையா? - நீதிபதி சரமாரி கேள்வி

தமிழகத்தில் உள்ள இரண்டு கட்சியினருக்கும், மக்களைப் பற்றி அக்கறை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.