K U M U D A M   N E W S

தமிழ்நாடு

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அந்தோனியார் தேவாலய திருவிழா... களைக்கட்டும் ஜல்லிக்கட்டு..!

அரியலூர் புனித அந்தோனியார் தேவாலய பொங்கல் திருவிழாவை முன்னிட்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி சிங்கராயபுரம் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இதில், 700 மாடுகள் 400 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.

விமர்சனங்கள் என்ற பெயரில் எவ்வளவோ எலிகள் வருகிறது.. விஜயை மறைமுகமாக சாடிய வடிவேலு..!

விமர்சனங்கள் என்ற பெயரில் எவ்வளவோ எலிகள் வருகிறது அவற்றையெல்லாம் சிக்ஸர்கள் அடிப்பது போல முதல்வர் அடிப்பதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை மறைமுகமாக சாடிய வடிவேலு, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியை தொடர்ந்து  முதல்வரின் பேரன்  இன்பநிதியும் மக்களுக்கு நிறைய செய்ய உள்ளார் என இன்பநிதியை அரசியலுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

மூக்கை நுழைத்த Mrs. மாண்புமிகு? மூடி மறைக்கும் 2 சீனியர்கள்? கடும் அப்செட்டில் தலைமை?

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க, சீனியர் மாண்புமிகுகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரால் தலைமை கடும் அப்செட்டாகியுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

செட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகாததால் தேர்வர்கள் குழப்பம்..!

செட் தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படும் என்று அறிவித்த நிலையில் இதுவரை எந்த தகவலும் இல்லாததால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. கைதான நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற நீதிமன்றம் மறுப்பு..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனை, சிகிச்சைக்காக  சென்னை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

பணத்திற்காக விருந்தாக்கப்பட்ட மகள்கள் ..கொடூரத் தாயின் அதிர்ச்சி செயல்.. கணவரின் புகாரில் மனைவி உட்பட இளைஞர்கள் கைது

சென்னையில் பணத்துக்காக இரு மகள்களையும் இளைஞர்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார் தாய் ஒருவர். சொகுசு வாழ்க்கைக்காக மகள்களின் கற்பை விற்ற கொடூரத் தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. என்ன நடந்தது பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்....

அரசு பள்ளி கழிவறையில் சக மாணவனை கொலை செய்த மாணவன் கைது..!

ராசிபுரத்தில் 9ம் வகுப்பு மாணவனை அடித்துக் கொன்ற சக மாணவனை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டுப்பாடுகளை மீறினால் கைது சீமானுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!

காவல்துறை சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என சீமானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.