K U M U D A M   N E W S

தமிழ்நாடு

81 வயது மூதாட்டியை தங்க நகைக்காக கழுத்தை நெரித்த பெண்.. மயிலாப்பூரில் அதிர்ச்சி

சென்னை மயிலாப்பூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த 81 வயது மூதாட்டியை கழுத்தை நெரித்து தங்க நகைகள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து அக்கம்பக்கத்தினர் போலீசில் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவ, மாணவிகளுக்கு தவெக சார்பில் கல்வி விருது விழா..!

10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக தவெக சார்பில் வரும் 30ம் தேதி கல்வி விருது விழா நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னையில் நூதன முறையில் ஏடிஎம்களில் கைவரிசை - 3 பேர் கைது!

சென்னையில் நூதன முறையில் ஏடிஎம்களில் வாடிக்கையாளர் பணத்தை முடக்கி நூதன முறையில் பணத்தை திருடிய உத்திரப்பிரேதேசத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கவில்லை - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கவில்லை என்றும், சமூக வலைதள வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் என்று வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

இன்றும் ரெட் அலர்ட்.. 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

கடந்த 24 மணி நேரத்தினை பொறுத்தவரை நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ள நிலையில் இன்றும், 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விமானத்தை டார்கெட் செய்து லேசர் ஒளி.. பரபரப்பான சென்னை விமான நிலையம்

துபாயிலிருந்து சென்னைக்கு 326 பயணிகளுடன், தரையிறங்க வந்த விமானத்தினை டார்கெட் செய்து மர்மமான முறையில், லேசர் லைட் ஒளி அடிக்கப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வாய் புண்ணுக்கு சுன்னத் சிகிச்சை.. ஞாபக மறதியால் சர்சையில் சிக்கிய டாக்டர்

வாய் புண்ணுக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவனுக்கு சுன்னத் சிகிச்சையினை மருத்துவர் மேற்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

குருவிகளுக்காக பைக்கை தானம் செய்த வினோத இளைஞன்

அலுவலகத்திற்கு செல்லும் பைக்கில் குருவி கூடு கட்டியிருப்பதை அறிந்து பைக்கை பயன்படுத்தாமல் குருவி குஞ்சு பறக்கும் வரை காத்திருக்கும் வினோத இளைஞரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழ்நாட்டின் தம்பிகள் யார் என்று விளக்க வேண்டும் – எல்.முருகன்

சார்கள் பெண்களை சீரழித்து வருகின்றனர், தம்பிகள் பணத்தை சுரண்டி வருகின்றனர் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு

கனமழை எச்சரிக்கை: நீலகிரியில் மக்கள் நாளை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்

நீலகிரியில் நாளை சுற்றுலா பயணிகள் உட்பட அனைவரும் இருப்பிடத்தை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.