Chennai Rain: அம்மா உணவகத்தில் இலவச உணவு ரெடி... சென்னையில் போக்குவரத்து நெரிசல் எப்படி..?
சென்னையில் பெய்த கனமழை காரணமாக, அம்மா உணவகங்களில் இரு தினங்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னையில் பெய்த கனமழை காரணமாக, அம்மா உணவகங்களில் இரு தினங்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று பெய்த கனமழை இன்று இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் கொடுத்துள்ளார். தற்போதைய மழை நிலவரப்படி சென்னை மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றே சொல்லப்படுகிறது.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 7.18 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
சென்னைக்கு இன்று கனமழை அபாயம் இல்லை. மிதமான மழைக்குதான் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.
சென்னையில் அக்.15 காலை 6 மணி முதல் அக்.16 காலை 6 மணி வரை பதிவாகியுள்ள மழை அளவு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.
தமிழகத்தை போன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பெங்களூர் மாநகராட்சி அலுவல கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார்.
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை உட்பட 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலியால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரத்தான ரயில்கள் ஆவடியில் இயக்கப்பட்டதால் ஆவடி ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்தனர்.
சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை புதுச்சேரி - நெல்லூர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக, விஜய்யின் தவெக மாநாடு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மழையின் தீவிரம் அதிகமாக இருப்பதால், தவெக-வுக்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்யும் என்பதால், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மழைப் பொழிவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்யும் என்பதால், அலுவலகம் சென்றவர்கள் சீக்கிரமே வீடு திரும்புவது நல்லது என, தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட் செய்துள்ளார்.
சென்னை சாலைகளில் மழை தண்ணீர் தேங்கி இருப்பதால் மிகுந்த அவதி அடைந்து வருவதாக ஆட்டோ ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே நாளில் இயல்பை விட 81% அதிகம் மழை பெய்துள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் எங்கேயும் மின் தடை இல்லை என்றும் 13,000 தன்னார்வலர்கள் சுகாதார பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, உணவுத் தட்டுப்பட்டை களைவதற்காக மண்டல வாரியாக அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
6 செ.மீட்டர் மழைக்கே பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது, இதனால் தமிழக அரசு மீதும், சென்னை மாநாகராட்சி மீதும் பொதுமக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நள்ளிரவில் தொடங்கிய கனமழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியொடு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் காய்கறி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 9 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு போலீஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை மற்றும் 12 காவல் மாவட்டத்தில் பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த தம்பதியினரிடம் ரூபாய் 89 லட்சம் மோசடி செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பருவமழையை எதிர்கொள்ள வெளிமாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் வெளியிட்ட தொழிலாளியை தாக்கி மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ வைரலானதை அடுத்து, திமுக நிர்வாகியை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.