K U M U D A M   N E W S

தமிழ்நாடு

"லக்கி பாஸ்கர்" படபாணியில் கொள்ளையடித்த வங்கி மேலாளர்.. வயதானவர்களின் வைப்பு நிதியை குறி வைத்து மோசடி!

லக்கி பாஸ்கர் படத்தில் யாரிடமும் சிக்காமல் கோடிக்கணக்கான ரூபாய் வங்கி பணத்தை மோசடி செய்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து, வங்கி மேலாளர் நூற்றுக்கணக்கான கோடி ரூபாயுடன் வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்தது போன்று, சென்னை அண்ணா நகரை சேர்ந்த இண்டஸ்இண்ட் வங்கி கிளை மேலாளர் லக்கி மஞ்சுளா கைவரிசை காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவலாளி அஜித்குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி..!

போலீசார் விசாரணையில் உயிரிழந்த காவலாளி அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாநில உரிமைக்கு குரல் கொடுத்தால் ஆன்ட்டி நக்சலைட்டுகள்.. விமர்சிக்கும் மத்திய அரசு - திருச்சியில் கனிமொழி பேச்சு

மாநில உரிமைக்கு குரல் கொடுத்தால் ஆன்ட்டி நக்சலைட்டுகள் என மத்திய அரசு அவர்களை அச்சுறுத்துகிறது என திருச்சியில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

பட்டாசு ஆலை வெடி விபத்து... ஒருவர் உயிரிழப்பு.. 4 பேருக்கு தீவிர சிகிச்சை!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை ஆதீனத்தின் கோரிக்கை நிராகரிப்பு.. கறார் காட்டும் சைபர் கிரைம் காவல்துறை

காவல்துறை சம்மனுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக விருப்பம் தெரிவித்து மதுரை ஆதீனம் கடிதம் எழுதியுள்ள நிலையில், நேரில் தான் ஆஜராக வேண்டும் என சைபர் கிரைம் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மாரடைப்பால் காலமானார்!

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 91 என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்.. வாலிபர் கைது

இன்ஸ்டாகிராமில் பெண்ணுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

சித்தி கொடுமையால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. தற்கொலைக்கு தூண்டியதாக தந்தை, சித்தி கைது!

சென்னை ஓட்டேரியில் சித்தியின் கொடுமை தாங்க முடியாமல் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக தந்தை, சித்தி கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.

முடிவுற்ற திட்டப் பணிகள்.. தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் சார்பில், ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ப்ரஷர் குக்கரில் சமைக்கிறீங்களா.. மருத்துவர்கள் தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

பிரபல மருத்துவர் ஒருவர் சமீபத்தில் சமூக ஊடகத்தில் பகிர்ந்த பதிவில், ஒரு நபருக்கு ப்ரஷர் குக்கரில் சமைத்து சாப்பிட்டதால், உடலில் கடுமையான ஈயம் (lead) விஷம் கலந்த உண்மை சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.