K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழ்நாடு

ரூ.284 கோடி டெண்டர்கள் ரத்து... முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு!

சென்னை மாநகராட்சியில் ரூ.284 கோடி மதிப்பிலான 35 நடைபாதை அமைக்கும் டெண்டர்களை ரத்து செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெக அரசின் முதல் பட்ஜெட்... அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை!

தவெக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி கிழக்கில் போட்டியா? மனம் திறந்து பேசிய ஸ்டாலின்..

திருச்சி கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முதல் முறையாக பதிலளித்த மு.க. ஸ்டாலின், "இன்னும் முடிவு செய்யவில்லை" என தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

அமோனியா வாயு கசிவு விபத்தில், சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு பெண் தொழிலாளர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு: நகை பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.

வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி.. நண்பர்களால் நேர்ந்த கொடூரம்!

சென்னை அருகே 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN Weather: சென்னை, செங்கல்பட்டு உள்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Sports-ஐ எடு Drugs-ஐ விடு: போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு மாரத்தானில் முதல்வர் விஜய் கலந்து கொண்டு ஓடினார்.

இனி கூட்டணி இல்லை... திமுக தனித்து நிற்கும் ! - ஆ.ராசா

திருவாரூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, திமுக கூட்டணி மற்றும் எதிர்வரும் தேர்தல் குறித்து பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி சீருடைகளில் நிலவும் ஏற்றத்தாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா தமிழக அரசு?

காமராசர் கொண்டுவந்த சீருடை முறை சமத்துவத்தை நோக்கியது. இன்று அரசு, தனியார் பள்ளி சீருடைகளில் பெரிய வேறுபாடுகள் உருவாகியுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் கதர் சீருடையை அமல்படுத்தினால் சமத்துவமும் நெசவாளர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என வலியுறுத்தப்படுகிறது.