K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழ்நாடு

ஈரக் குலையறுத்த இறால் ஆலை! அப்பாவி உயிர்களை பறித்த அமோனியா வாயு

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைபேர் பகுதியில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செல்வப்பெருந்தகைக்கு பதிலாக மாணிக்கம் தாகூர்... தமிழக காங்கிரஸில் அதிரடி மாற்றம் !

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த அறிவிப்பு முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

அரசு மரியாதையுடன் பாக்கியராஜ் உடல் தகனம்... கண்ணீருடன் விடை கொடுத்த திரையுலகம்!

தமிழ் சினிமாவின் பன்முக திறமையாளரான இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்கியராஜின் உடல் இன்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

“குதிரை பேரமா? ஒட்டக பேரமா?”... மதிமுக விலகல் குறித்து வைகோ ஆவேசம்!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகிய நிலையில், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் குறித்து வைகோ கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். அவரது பேட்டி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பணி நிரந்தரம் இல்லாத வேதனை... மாநகராட்சி ஊழியர் த்ற்கொலை !

10 ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சியில் தினக்கூலி ஊழியராக பணியாற்றிய சாமுவேலின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணி நிரந்தரம் இல்லாத வேதனை, கடன் சுமை குறித்து அவர் பதிவு செய்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாக்யராஜ் மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!

பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் மறைவுக்கு முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

TN Weather: சென்னை, திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சாதியுடன் ஐடி கார்டு? செங்கோட்டையன் பேச்சு சர்ச்சை !

அரசு பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈஷாவில் அடுத்தடுத்து மரணங்கள்... சிபிசிஐடி விசாரணை கோரி சிபிஎம் வலியுறுத்தல்!

கோவை ஈஷா யோகா மையத்தில் அண்மையில் நடந்த இரண்டு மரணங்கள் மற்றும் கடந்த காலத்தில் ஏற்பட்ட மர்ம மரணங்கள் குறித்து தீவிரமான சந்தேகங்கள் எழுந்துள்ளன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.