K U M U D A M   N E W S

அரசியல்

இடைத்தேர்தல் முடிவு: 5-ல் 4 இடங்களில் தோல்வி.. பாஜகவினர் அதிர்ச்சி

குஜராத், பஞ்சாப், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 4 மாநிலங்களிலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்றது. 5 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்ட நிலையில், 1-ல் மட்டுமே வென்றுள்ளது.

முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா புகைப்படங்கள் குறித்த சர்ச்சை.. நயினார் நாகேந்திரன் விளக்கம்!

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடத்தை ஒழிப்போம் என்று அண்ணா, பெரியார் படங்களுடன் வீடியோ வெளியானது குறித்து நான் இன்னும் பார்க்கவில்லை, அதனை பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்.. ஷாக் கொடுத்த காங்கிரஸ்

குஜராத், பஞ்சாப், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 4 மாநிலங்களிலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்று வருகிறது. கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியின் வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி தற்போது காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

காவலர்கள் பதவி உயர்வு.. புதிய அரசாணை பிறப்பிக்க திருமாவளவன் வலியுறுத்தல்

2002 முதல் பணியில் சேர்ந்த காவலர்கள் பதவி உயர்வு பெற புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

முருகனின் வேல் எங்களுக்கு உதவி செய்யும்.. தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

"தமிழகத்தில் நடக்கும் சமூக விரோத நடவடிக்கைகள் மாய்ந்து போக, முருகனின் வேல் எங்களுக்கு உதவி செய்யும்" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தடைகளை தகர்த்தெறியும் சக்தி ஆன்மீகத்துக்கு உண்டு.. ஜி.கே. வாசன் பேட்டி

"முருக பக்தர்கள் மாநாட்டுக்கு யார் தடை ஏற்படுத்த நினைத்தாலும் அதனை தகர்த்தெறியும் சக்தி ஆன்மீகத்துக்கு உண்டு" என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவினை சீண்ட வேண்டாம்: திமுகவிற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பான அவதூறு கார்ட்டூன் விவகாரம் தமிழக அரசியலில் அதிர்வை உண்டாக்கியுள்ளது. திமுக ஐடி விங் மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மீது அதிமுக தரப்பில் மாவட்டந்தோறும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது.

பட்டியலின மக்கள் மீதான வன்முறை: திமுக ஆட்சியில் உச்சம்- நயினார் நாகேந்திரன்

பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் கொடூர உச்சத்தை அடைந்திருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

பேருந்துகள் வாங்க ஒதுக்கப்படும் நிதி எங்கே? டிடிவி தினகரன் கேள்வி

அரசு பேருந்து விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், புதிய பேருந்துகள் வாங்க ஒதுக்கப்படும் நிதி எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுவதாகவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தமிழ்நாட்டில் நடமாட முடியாது.. ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

எடப்பாடி பழனிசாமியை இழிவுப்படுத்தும் செயலில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தொடர்ந்து ஈடுபட்டால், அவரால் தமிழ்நாட்டில் நடமாட முடியாது" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.