இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம்? மத்திய அமைச்சர் விளக்கம்
இருசக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிக்கப்போவதாக வெளியான செய்திகள் தவறானவை என்று மத்தியஅமைச்சர் நிதின் கட்கரி விளக்கமளித்துள்ளார்.
இருசக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிக்கப்போவதாக வெளியான செய்திகள் தவறானவை என்று மத்தியஅமைச்சர் நிதின் கட்கரி விளக்கமளித்துள்ளார்.
ஏர் இந்தியா விமானத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில், அவ்விமானத்தின், கருப்புப் பெட்டியில் இருந்த தரவுகள் மீட்கப்பட்டதாகவும், தகவல்களை பிரித்தெடுத்து விசாரிக்கும் பணிகள் நடப்பதாகவும் தகவல் பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுகள் மூலம் விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க ஆய்வு நடக்கிறது - விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையமான (NHAI) இன்று விளக்கம் அளித்துள்ளது.
ஒரே நாளில் 3,433 சாலைப் பள்ளங்களை சீரமைத்து டெல்லி மாநில பொதுப்பணித்துறை உலக சாதனை படைத்துள்ளது.
மும்பையில் இருந்து சென்னைக்கு 162 பயணிகளுடன் வந்து கொண்டு இருந்த விமானமானது, நடுவானில் பயணிக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்பால் ஐதராபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியுள்ளது. உடல் நலம் பாதித்த பயணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்னை வந்து சேர்ந்தது விமானம்.
வயநாட்டில் பெய்த கனமழையால் முண்டகை பகுதியில் நிலச்சரிவு, முண்டகையில் மீண்டும் நிலச்சரிவு மற்றும் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெய்லி பாலம் அருகே வெள்ளம் பாயும் நிலையில், அப்பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
வரதட்சணை வழக்கில் மனைவியை கொலை செய்த பிளாக் கேட் கமாண்டோவுக்கு சலுகை வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றவர் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நேரு அருங்காட்சியத்தில் இருந்து சோனியா காந்தி பெற்று சென்ற நேருவின் கடிதங்களை அவரிடம் இருந்து திரும்ப பெற சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இண்டிகோ விமான நிறுவனத்தில் பயிற்சி விமானியாக பணிபுரிந்த இளைஞர் ஒருவர், தான் சாதி அடிப்படையிலான துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி, நீட் பயிற்சி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், கோபமடைந்த அவரது தந்தை கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார்.