K U M U D A M   N E W S
Kumudam Ad

இந்தியா

கேரள கடலில் தீப்பிடித்த சிங்கப்பூர் கப்பல்.. வெடித்துச்சிதறும் அபாயம்..!

கேரளக் கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் வான்ஹாய் 503 என்ற சரக்குக் கப்பல் வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஏசி யூஸ் பண்றீங்களா?.. மத்திய அரசு கொண்டு வரும் புது ரூல்ஸ்

ஏசி பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளளவும், சோதனை அடிப்படையில் இது கொண்டுவரப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

வரதட்சணையாக கிட்னியை கேட்ட மாமியார்.. மருமகள் அதிர்ச்சி

வரதட்சணையாக பைக், பணம், நகைகள் கொண்டு வர முடியாததால், தன் கணவருக்கு சிறுநீரகத்தை தானம் செய்ய மாமியார் வற்புறுத்தியதாக பெண் ஒருவர் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவாவில் பரபரப்பு: மன்னிப்பு கேட்ட சுகாதாரத்துறை அமைச்சர்.. நிராகரித்த அரசு மருத்துவர்!

கோவாவில் சுகாதாரத்துறை அமைச்சரின் 'ஸ்டுடியோ மன்னிப்பை' நிராகரித்துள்ளார் அரசு மருத்துவர். தான் அவமானப்படுத்தப்பட்ட அதே மருத்துவமனையில் அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அரசு மருத்துவர் தெரிவித்துள்ளார்.

வீடு புகுந்து முதியவரை கொலை செய்த பெண்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்

ஒடிசாவில் பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 60 வயது முதியவரை, பெண்கள் குழு ஒன்று வீடு புகுந்து கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹனிமூன் ஜோடி மிஸ்ஸிங் வழக்கில் ட்விஸ்ட்.. வழிகாட்டி கொடுத்த துப்பு: 4 பேர் கைது

புதுமணத்தம்பதியினர் மேகாலயாவிற்கு தேனிலவிற்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் கணவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மனைவியை போலீசார் தேடி வந்த நிலையில், சுற்றுலா வழிகாட்டி கொடுத்த தகவலால் இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியே கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மனைவி மீது சந்தேகம்: தலையுடன் காவல் நிலையம் வந்த கணவர்-பெங்களூரில் பரபரப்பு

மனைவியை கொன்று தலையுடன் காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ள கணவரின் செயல் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு கூட்டநெரிசலில் உயிரிழப்பு: கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா

பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், தார்மீகப் பொறுப்பேற்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.

புதிய ரக மாம்பழத்திற்கு அமைச்சர் ’ராஜ்நாத் சிங்’ பெயரை சூட்டிய மாம்பழ மனிதர்!

இந்தியாவின் புகழ்பெற்ற 'மாம்பழ மனிதர்' என அழைக்கப்படும் கலீமுல்லா கான், புதிதாக உருவாக்கப்பட்ட மாம்பழ இரகத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பெயரை அடிப்படையாக கொண்டு 'ராஜ்நாத் ஆம்' (Rajnath Aam) எனப் பெயரிட்டுள்ளார்.

கோலியை கைது பண்ணுங்க.. சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் ’Arrest kohli’ ஹேஷ்டாக்

ஆர்சிபி அணிக்காக நடைப்பெற்ற பாராட்டு விழாவினை காண, சின்னசாமி மைதானத்திற்கு வெளியே குவிந்த ரசிகர்களிடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சிறுமி உட்பட 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பேசுப்பொருளாகியுள்ள சூழ்நிலையில் #Arrestkohli என்கிற ஹேஸ்டாக் எக்ஸ் வலைத்தளத்தில் ட்ரெண்டாகிறது.