K U M U D A M   N E W S

போதை மையமாகும் வீட்டு வசதி குடியிருப்புகள்

தலைநகரின் மையப்பகுதியில் உள்ள இந்த இடத்தில் போதை ஆசாமிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று குடியிருப்போர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

சச்சினின் சாதனையை முறியடித்த 19 வயது இளைஞர்.. துலீப் டிராபியில் அசத்தல்

துலீப் டிராபி அறிமுகப் போட்டியில், 19 வயதான முஷீர் கான் 181 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

'பள்ளிகளில் மத-சாதிய உணர்வுகள் வேண்டாம்'.. திமுக மாணவர் அணி தீர்மானம்!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் தொடர்ந்து இதுபோல் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கு பொறுப்பேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஆன்மிக சொற்பொழிவு சர்ச்சை... தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு சர்ச்சையான நிலையில் அப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றி பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது

பெண்கள் பாதுகாப்பு.. திமுக அரசை கடுமையாக சாடிய இபிஎஸ்

தஞ்சை பூதலூரில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. திமுக ஆட்சியில் பெண்கள் நடமாடவே முடியாது அளவுக்கு பாதுகாப்பு கொஞ்சமும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார் 

GOAT: லியோ வரிசையில் இரண்டாவது நாளில் தடுமாறும் கோட்... விஜய்ண்ணா ரசிகர்கள் சோகம்!

விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஆனால், இரண்டாவது நாளான இன்று கோட் படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்கள் வெளியாகி விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முதலமைச்சர் முன்னிலையில் 3 முக்கிய நிறுவனங்களுடன் ரூ.850 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.850 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது

Kanguva Release Date: சூர்யாவின் கங்குவா புதிய ரிலீஸ் தேதி... சிக்கலில் சிவகார்த்திகேயனின் அமரன்..?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்துக்காக, சூர்யா நடித்துள்ள கங்குவா அக்டோபர் 10ம் தேதி ரிலீஸில் இருந்து பின்வாங்கியது. இந்நிலையில், கங்குவா படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

நில மோசடி வழக்கு.. சிபிஐ அதிகாரிகள் சோதனை

நீலாங்கரை நிலமோசடி வழக்கு தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அண்ணாநகரில் காவல் ஆய்வாளர் ஆனந்தபாபு வீடு மற்றும் சாஸ்திரி நகர், பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், வேளச்சேரியிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. 

பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்... எமனாக மாறிய பெற்றோர்கள்

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே பச்சிளம் பெண் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் பெற்றோர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசு பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் - பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு

சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில் 2 அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் விளக்கம் அளிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார் 

விஜய்யின் தவெக மாநாடுக்கு அனுமதி கிடைக்குமா..?

மாநாடு நடத்துவது தொடர்பாக தவெகவினருக்கு போலீசார் எழுப்பிய 21 கேள்விகளுக்கு இன்று அக்கட்சி சார்பில் பதிலளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Nivin Pauly: நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு... பிரபல இயக்குநரின் ஸ்டேட்மெண்ட்டால் பரபரப்பு!

மலையாள நடிகர் நிவின் பாலி மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்ததை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டை நிவின் பாலி மறுத்திருந்த நிலையில், தற்போது பிரபல இயக்குநர்கள் கொடுத்துள்ள ஸ்டேட்மெண்ட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிற்போக்கு கருத்துகளை கேள்வி கேளுங்கள் - மேடையில் விளாசிய அன்பில் மகேஷ்

கல்வியே சமத்துவ மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் எனும் நிகழ்ச்சி சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இதில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். 

அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம்... அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி

சென்னையில் அரசுப்பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில் சொற்பொழிவு ஆற்றிய மகாவிஷ்ணு, ஆசிரியரை தரக்குறைவாக பேசியது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்  

சவாரியை ரத்து செய்ததால் ஆத்திரம்.. பெண்ணை தாக்கிய ஓட்டுநர்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சவாரியை ரத்து செய்த பெண்ணை, ஓலா ஆட்டோ ஓட்டுனர் கண்ணத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

MahaVishnu: அரசுப் பள்ளிகளில் கார்ப்பரேட் ஆன்மிக போதனை.. சமூக வலைதளங்களில் வைரலாகும் சர்ச்சை வீடியோ!

சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் கார்ப்பரேட் சொற்பொழிவாளரை கொண்டு ஆன்மிக போதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு விவகாரம் - பள்ளிக்கல்வி இயக்குநர் அவசர ஆலோசனை

சென்னை பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்திய விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளார்

Actress Sowmya: “நடிக்க சான்ஸ் தரேன்..” பிரபல நடிகையை செக்ஸ் அடிமையாக வைத்திருந்த தமிழ் இயக்குநர்!

பிரபல தமிழ் இயக்குநர் ஒருவர் தன்னை செக்ஸ் அடிமையாக வைத்திருந்ததாக நடிகை செளமியா தெரிவித்துள்ள குற்றச்சாட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த சந்திரபாபு நாயுடு.. திடீரென ரயில் வந்ததால் பரபரப்பு

ஆந்திராவின் விஜயவாடா பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார். அந்த சமயம் ரயில் தண்டவாளத்தின் அருகே உள்ள பாலத்தில் நின்று கொண்டிருந்த சமயத்தில் திடீரென ரயில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகளின் எச்சரிக்கையை தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டு, பாலத்தின் ஓரத்தில் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அதிகாரிகள் பாதுகாப்பாக நின்ற பின்னர் ரயில் அவர்களை கடந்து சென்றது. 

அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு.. சமூக வலைதளங்களில் கிளம்பிய எதிர்ப்பு

சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளி மற்றும் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்ச்சைக்குரிய ஆன்மீக சொற்பொழிவாளரை கொண்டு மாணவர்களுக்கு போதனை நடத்திய விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது

Rain Update: சென்னை மக்களை Chill செய்த மழை... தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு சம்பவம் இருக்கு!

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தவெக மாநாடு... திமுகவுக்கு பயம்.. - வெளிப்படையாக சொன்ன நயினார் நாகேந்திரன்

அதிமுக மற்றும் பாஜக இடையே மீண்டும் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

"பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்" - ராகுல் காந்தி

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை விழுந்து நொறுங்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.