K U M U D A M   N E W S

கல்யாண சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில்.. இங்கு வருவதும் கைலாசத்திற்கு செல்வதும் ஒன்றுதான்!

Nallur Kalyanasundareswarar Temple :பிறவி பலனை அடைய வேண்டும் என நினைப்பவர்கள் தங்களது வாழ்வில் ஒருமுறையாவதும் கல்யாண சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்கு நிச்சயம் வர வேண்டும்.

"ஜெயலலிதாவே போய் சேந்துருச்சு..! அப்புறம் என்ன அம்மா உணவகம்...?" சர்ச்சையை கிளப்பிய RS பாரதி!

RS Bharathi Criticized Amma Unavagam Issue : அம்மா உணவகத்தில் தயாராகும் சப்பாத்தியை வட மாநிலத்தவரே சாப்பிடுவதாகவும், அவர்களுக்கு தமிழக மக்களின் வரிப்பணத்தில் அம்மா உணவகத்தில் சாப்பாடு போடப்படுவதாகவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

TNPSC : அரசு பணியாளர் தேர்வு மதிப்பீட்டில் மாற்றம்... மென்பொருள் மூலம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய முடிவு!

TNPSC Exam New Update : டிஎன்பிஎஸ்சி தேர்வு மதிப்பீட்டில் மென்பொருள் மூலம் கணினி வழி மதிப்பீட்டு முறையை கொண்டு வர அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

செப்.27-ல் பிரதமருடன் முதலமைச்சர் சந்திப்பு

சமக்ரா சிக்ஷா நிதி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 27ம் தேதி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Devara Trailer: அடேங்கப்பா! சுறாவுடன் சண்டை போடும் ஜூனியர் என்டிஆர்... தேவரா ட்ரைலர் எப்படி இருக்கு?

Devara Movie Trailer Released : தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள தேவரா படத்தின் டரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்த ட்ரைலருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மகன், மருமகனுக்கு மட்டும்தான் பதவி.. திமுகவை கடுமையாக சாடிய நிர்மலா சீதாராமன்!

திமுகவில் மகன், மருமகன் உள்ளிட்டோருக்கு மட்டுமே தலைவர் பதவி கிடைக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.

கேசவ விநாயகத்திற்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவெடுத்துள்ளது.

உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... வானிலை ஆய்வு மையம் சொன்ன புதிய தகவல்!

இன்று ( செப். 22) முதல் வருகின்ற 24ம் தேதி வரை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

IND vs BAN : சாதனைகளை தகர்த்தெறிந்த அஸ்வின்.. வார்னே, மெக்ராத் எல்லாம் அப்புறம் தான்

Ravichandran Ashwin Record in IND vs BAN 1st Test : ரவிச்சந்திரன் அஸ்வின் வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார்.

Offer Sale : ஆஃபர் கொடுத்த துணிக்கடை... அள்ளிச்செல்ல குவிந்த மக்களால் தள்ளுமுள்ளு..

Offer Sale in Erode : ஈரோடு தலைமை தபால் நிலையம் அருகே உள்ள துணி கடையில் சலுகை விலையில் துணிகள் விற்பனை என அறிவிக்கப்பட்டதால் மக்கள் குவிந்தனர். ஒரே நேரத்தில் மக்கள் அனைவரும் உள்ளே செல்ல முயற்சித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். 

'பெருமாளே என்னை மன்னியுங்கள்’.. 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்!

Deputy CM Pawan Kalyan on Tirupati Laddu : ''கடவுளே... கடந்த ஆட்சியாளர்கள் உமக்கு எதிராக செய்த பாவங்களைக் கழுவும் சக்தியை எனக்கு வழங்குங்கள் என்று பெருமாளிடம் கேட்க போகிறேன். கடவுள் நம்பிக்கையும், பாவ பயமும் இல்லாதவர்களே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்'' என்று பவன் கல்யாண் கூறியுள்ளார்.

Earthquake : நெல்லை அருகே நில அதிர்வு... மக்கள் அச்சம்

Tirunelveli Earthquake : நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.

LIVE : Thirumavalavan Speech : தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் - திருமா

VCK Leader Thirumavalavan About Liquor Ban in Tamil Nadu : விசிக தலைவர் திருமாவளவன் x பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், அனைத்துக் கட்சிகளும் மதுவிலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகின்றன. மத்திய அரசு தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கி மதுவிலக்கு சட்டத்தை இயற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து தமிழ்நாடு மதுக்கடைகளை இழுத்து மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Ravichandra Ashwin : நாகினியின் ஆட்டத்திற்கு மகுடி ஊதிய அஸ்வின் - முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி

Ravichandra Ashwin at India vs Bangladesh 1st Test Match : ரவிச்சந்திரன் அஸ்வினின் அபார ஆட்டத்தால், வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

Seeman : ‘நந்தன் என்னை வெகுவாக பாதித்த திரைப்படம்’.. உருகிய சீமான்!

Seeman Praised Nandhan Movie : ''கலையைப் போற்றுவதும், கலைஞர்களைக் கொண்டாடுவதும் சமூகத்தின் தார்மீகக் கடமையாகும். ஆகவே, சமத்துவத்தைப் போதிக்கும் ‘நந்தன்’ எனும் உன்னதப்படைப்பைக் கண்டுகளிப்போம்! நற்கருத்துகளை விதைக்கும் மக்களுக்கான கலைஞர்களைக் கொண்டாடுவோம்’’ என்று சீமான் கூறியுள்ளார்.

'இலங்கையில் புதிய அதிபர்.. இப்பயாவது இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுங்க'.. அன்புமணி கோரிக்கை!

''இலங்கையில் தேர்தல் முடிவடைந்து புதிய அதிபர் பதவியேற்கவுள்ள நிலையில், மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி அவரிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

பிரபல A+ ரவுடி சிடி மணிக்கு சுத்துப்போட்ட போலீஸ்.. உயிருக்கு பாதுகாப்பு கோரி தந்தை கண்ணீர்

பிரபல ரவுடி சிடி மணியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ள நிலையில், சிடி மணியின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரி அவரது தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி தந்தை மகன் உள்ளிட்ட 3 பேர் பலி..

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாள்பட்டு பகுதியில் மின்வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். சட்டவிரோத மின்வேலியில் சிக்கி குரிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்த சிங்காரம், அவரது மகன் லோகேஷ் மற்றும் கரிபிரான் ஆகியோர் உயிரிழந்தனர்.

சொந்த மண்ணில் அசத்திய அஸ்வின்... முதல் டெஸ்டில் அபார வெற்றி பெற்ற இந்தியா

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வங்க தேச அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2வது இன்னிங்சில் தமிழக வீரர் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்

இலங்கை அதிபராகும் புரட்சி நாயகன்.. யார் இந்த அனுர குமார திசநாயகே?

அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக கடுமையாக போராட்டம் வெடித்த நிலையில், அதிபர் மாளிகையை சூறையாடினார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே தப்பிச் சென்றார். அரசுக்கு எதிரான இலங்கை மக்களின் கொந்தளிப்பை அநுர குமார திசாநாயகே நன்கு பயன்படுத்திக் கொண்டார்.

கஞ்சா விற்பனையை தடுக்க வீடு வீடாக சென்று சோதனை.. போலீசாரின் அதிரடி நடவடிக்கை

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தேவநாதனின் சொத்துகள் பறிமுதல்

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனிடம் இருந்து 4 கார்கள், ரூ.1 கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாடு.. மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு

கொடைக்கானலில் 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், அவற்றை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு ஒரு பாட்டிலுக்கு ரூ.20 பசுமை வரி விதிக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பிரபல ரவுடி சிடி மணி கைது

சேலத்தில் தலைமறைவாக இருந்த பிபல ரவுடி சிடி மணியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் மீது கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன

ஃபாஸ்ட் ஃபுட் கடை முதலாளி காரில் கடத்தல்.. போலீஸ் தேடியதும் பஸ்ஸில் அனுப்பி வைத்த மர்ம கும்பல்

ஃபாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளரை காரில் கடத்திய மர்ம கும்பல், போலீசார் தேடுவதை அறிந்த மர்ம கும்பல் பஸ்ஸில் ஏற்றி ஊருக்கு அனுப்பி உள்ளனர்.