K U M U D A M   N E W S

Author : Vasuki

பாகிஸ்தான் மீது இந்திய இராணுவம் விடிய விடிய தாக்குதல்... முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு!

பாகிஸ்தான் தலைநர்கர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை குறிவைத்து இந்திய ராணுவம் விடிய விடிய தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது லாகூர், கராச்சி, சியால்கோட் உள்ளிட்ட பகுதிகளில் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தொடர் தாக்குதலை நடத்தி வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஆப்ரேஷன் சிந்தூர்: பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் ரத்து

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து, குரோஷியா, நார்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பயணங்களை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்துள்ளதாகவும், மேலும், பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மக்களின் நலனை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளது - விங் கமாண்டர் வியோமிகா சிங்

மக்களின் நலனை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும், இந்திய ஆயுதப்படையுடன் கடற்படையும் சேர்ந்து ஆப்ரேஷன் சிந்தூரில் ஈடுபட்டுள்ளதாவும், விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.

நீதி வழங்கும் நோக்கில் ஆபரேஷன் சிந்தூர்- கர்னல் சோபியா குரேஷி

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதியை வழங்கும் நோக்கில் ஆப்ரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டதாக கர்னல் சோபியா குரேஷி தெரிவித்துள்ளார்.

"பஹல்காம் தாக்குதலுக்கு TRF அமைப்பே காரணம்" - விக்ரம் மிஸ்ரி குற்றச்சாட்டு

பாகிஸ்தான் - ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல் நடத்தியற்கு TRF அமைப்பே காரணம் என்றும், இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்துள்ளார்.

OPERATION SINDOOR- இந்திய ராணுவத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துணைநிற்பதாக கூறியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

"இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்” விரைவில் முடிவுக்கு வரும் - டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"இந்தியா - பாகிஸ்தான் போர்; உலகம் தாங்காது" - ஐநா சபை பொதுச் செயலாளர் கவலை

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதலை உலகம் தாங்காது என்று கவலை தெரிவித்துள்ள ஐநா சபை பொதுச் செயலளார் ஆண்டனியோ குட்டர்ஸ், இரு நாடுகளும் ராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

OPERATION SINDOOR - இந்திய ராணுவத்திற்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் தாக்குதல் நடத்தியற்கு மத்திய அமைச்சர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

OPERATION SINDOOR - பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் அதிரடி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் தரமான பதிலடியை கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், இந்தியர்கள் 3 பேர் உயிரிழுந்துள்ளாதாக இந்தியராணுவம் தெரிவித்துள்ளது.

வரவேற்ப்பை பெற்றுள்ள மனிதர்கள் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கத்தில், ஒர் இரவில் நடக்கும் திரில்லர் கதையில் உருவான “மனிதர்கள்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

உரிமை கோரப்படாத உடல்கள் அடக்கம்.. அரசு சுற்றறிக்கை வெளியிட மனித உரிமை ஆணையம் பரிந்துரை!

உரிமை கோரப்படாத இறந்தவர்களின் உடல்களை கண்காணித்து, கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணைய பரிந்துரை செய்துள்ளது.

இந்தியர்களின் கவனத்திற்கு.. விசா இல்லாமல் செல்லும் வெளிநாடுகள் தெரியுமா?

இந்தியர்கள் விசா இல்லாமல் எந்த நாட்டிற்கு எல்லாம் செல்லலாம் என்பதனை இப்பகுதியில் காணலாம்.

ராகவ் நடிக்கும் நாக் நாக் திரைப்படம்.. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

இயக்குநர் ராகவ் ரங்கநாதன் இயக்கத்தில் புதிய களத்தில் உருவாகியுள்ள நாக் நாக் என்று பெயரிடப்பட்டுள்ள திரில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

உலகிலேயே முதன்முறையாக... தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ்!

இந்தியாவிலேயே முதல்முறையாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் செய்யும் வசதி கொண்டுவர உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சுற்றுச்சூழல், மருத்துவ உபகரணங்கள் தொடர்பான நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

நாளை மறுநாள் வெளியாகிறது +2 பொதுத்தேர்வு முடிவுகள்!

தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக மே.9-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே மே.8-ம் தேதி வெளியாகிறது.

வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு.. இடைக்காலத்தடையை நீட்டித்த உச்சநீதிமன்றம்!

வக்ஃப் சட்டத் திருத்தத்தின்படி நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை, உச்சநீதிமன்றம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை.. பின்னணியில் அமைச்சரா? போலீஸ் விசாரணை!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் நேற்று இரவு, மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிர் அணி பொறுப்பில் உள்ள சரண்யாவை மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டி தலையை துண்டாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் அமைச்சர் PTR மீது காலனி வீசிய பாஜக பெண் நிர்வாகி கொடூரமான முறையில் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு குடும்ப தகராறு காரணமா? அல்லது அமைச்சரின் ஆதரவாளர்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து.. 22 பேர் படுகாயம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை சாலையில் சுற்றுலாப் பயணிகள் வேன் பாறையில் மோதி கவிழ்ந்த விபத்தில் 13 குழந்தைகள் உட்பட 22 பேர் படுகாயமடைந்தனர்.

கோயில் திருவிழாவில் பிரச்னை இல்லை - புதுக்கோட்டை போலீஸ் விளக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில், கோவில் திருவிழாவின் ஒரு பகுதியான, தேரோட்டத்தின்போது, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என புதுக்கோட்டை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

வழுக்கி விழுந்த வைகோ... காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது வீட்டில் உள்ள குளியலறையில், வழுக்கி விழுந்து காயமடைந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DC vs SRH Match Update : மழையால் போட்டி ரத்து.. ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த SRH!

DC vs SRH Match Update in Tamil : நடப்பு ஐபிஎல் தொடரில் 18-வது சீசனில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையிலான லீக் போட்டி நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ஐதரபாத்தில் விடாமல் பெய்த தொடர் மழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இதன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து 3வது அணியாக ஐதரபாத் அணி வெளியேறியது.

பி.எஸ்.4 வாகன மோசடி: அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டுக்கு பின், பி.எஸ்.4 வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடபழனியில் நகை வியாபாரியை கட்டிப் போட்டு நகை கொள்ளை!

சென்னை வடபழனியில் நகை வியாபாரியை கட்டி போட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேரை கைது செய்த போலீசார், 23 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.