பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் முன்னிலையில் அவரது அந்தரங்க வீடியோக்களை ஆண் காவல்துறை அதிகாரிகள் பார்த்து விசாரித்தற்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் இது போன்ற வழக்குகளில் பெண் காவல் அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இணையதளங்களில் பகிரப்பட்ட அந்தரங்க வீடியோக்களை அகற்ற கோரி பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவின் படி வீடியோ இடம்பெற்றிருந்த அனைத்து இணையதளங்களையும் முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் 39 இணையதளங்களில் இந்த வீடியோக்கள் மீண்டும் பரவி வருவதாகவும், அதைத் தடுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, வீடியோக்கள் மீண்டும் பரவாமல் தடுப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இணையதளங்களில் பகிரப்பட்ட அந்தரங்க வீடியோக்களை அகற்ற எங்குப் புகார் அளிக்க வேண்டும், புகார் அளித்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து விரிவான மனுத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் பெயரை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டதுடன், குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காட்டுவதற்காகச் சம்பந்தப்பட்ட வீடியோவை அப்பெண் முன்னிலையில் 7 காவல்துறையினர் பார்வையிட்டு விசாரித்தற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, காவல்துறையின் இச்செயல் ஏற்கனவே பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற வழக்குகளில் விசாரணைக்குப் பெண் காவல்துறை அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர், நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட நீதிபதி, முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை உடனடியாக நீக்க வேண்டும் எனக் காவல்துறையினருக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 22 ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.
இணையதளங்களில் பகிரப்பட்ட அந்தரங்க வீடியோக்களை அகற்ற கோரி பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவின் படி வீடியோ இடம்பெற்றிருந்த அனைத்து இணையதளங்களையும் முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் 39 இணையதளங்களில் இந்த வீடியோக்கள் மீண்டும் பரவி வருவதாகவும், அதைத் தடுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, வீடியோக்கள் மீண்டும் பரவாமல் தடுப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இணையதளங்களில் பகிரப்பட்ட அந்தரங்க வீடியோக்களை அகற்ற எங்குப் புகார் அளிக்க வேண்டும், புகார் அளித்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து விரிவான மனுத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் பெயரை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டதுடன், குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காட்டுவதற்காகச் சம்பந்தப்பட்ட வீடியோவை அப்பெண் முன்னிலையில் 7 காவல்துறையினர் பார்வையிட்டு விசாரித்தற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, காவல்துறையின் இச்செயல் ஏற்கனவே பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற வழக்குகளில் விசாரணைக்குப் பெண் காவல்துறை அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர், நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட நீதிபதி, முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை உடனடியாக நீக்க வேண்டும் எனக் காவல்துறையினருக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 22 ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.