தமிழக காவல்துறையின் சேவை மற்றும் அர்ப்பணிப்பை போற்றும் வகையில், "தமிழ்நாடு காவலர் தினம்" தாம்பரம் மாநகர காவல் சார்பில் உணர்வுபூர்வமாகவும், பெருமையுடனும் கொண்டாடப்பட்டது. தாம்பரம் மாநகர காவல் தலைமை அலுவலகத்தில் செப்டம்பர் 6, 2025 அன்று இதற்கான சிறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக், இ.கா.ப., தாம்பரம் ஆயுதப்படை மரியாதை (Quarter Guard) ஏற்றுக்கொண்டார். காவல் துறையின் முக்கிய நோக்கங்களான நேர்மை, ஒழுக்கம் மற்றும் பொதுமக்களுக்கான சேவை ஆகியவற்றை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், தாம்பரம் மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் “காவலர் தின உறுதிமொழி” எடுக்கப்பட்டது.
கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையின்போது உயிர்த் தியாகம் செய்த சார்பு ஆய்வாளர் திரு. எத்திராஜுலு அவர்களுக்கு, குன்றத்தூர் காவல் நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வைத் தாம்பரம் காவல் துணை ஆணையாளர் முன்னின்று நடத்தினார். மேலும், காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில், காவல் துறையின் வரலாறுகுறித்த கண்காட்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. மாணவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கப் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகளும் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சியின் இறுதியில், காவல் துறையினரிடையேயும் அவர்களின் குடும்பத்தினரிடையேயும் ஒற்றுமையையும் நல்லுறவையும் வளர்க்கும் வகையில், பாரம்பரியமான பரா கானா (Bara Khana) விருந்து நடைபெற்றது. இந்தத் தருணத்தில், காவல் ஆணையர் திரு. அபின் தினேஷ் மோதக் அவர்கள், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் காவலர்களின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் முன்மாதிரியான சேவைக்காகத் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இந்த விழாவில், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக், இ.கா.ப., தாம்பரம் ஆயுதப்படை மரியாதை (Quarter Guard) ஏற்றுக்கொண்டார். காவல் துறையின் முக்கிய நோக்கங்களான நேர்மை, ஒழுக்கம் மற்றும் பொதுமக்களுக்கான சேவை ஆகியவற்றை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், தாம்பரம் மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் “காவலர் தின உறுதிமொழி” எடுக்கப்பட்டது.
கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையின்போது உயிர்த் தியாகம் செய்த சார்பு ஆய்வாளர் திரு. எத்திராஜுலு அவர்களுக்கு, குன்றத்தூர் காவல் நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வைத் தாம்பரம் காவல் துணை ஆணையாளர் முன்னின்று நடத்தினார். மேலும், காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில், காவல் துறையின் வரலாறுகுறித்த கண்காட்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. மாணவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கப் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகளும் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சியின் இறுதியில், காவல் துறையினரிடையேயும் அவர்களின் குடும்பத்தினரிடையேயும் ஒற்றுமையையும் நல்லுறவையும் வளர்க்கும் வகையில், பாரம்பரியமான பரா கானா (Bara Khana) விருந்து நடைபெற்றது. இந்தத் தருணத்தில், காவல் ஆணையர் திரு. அபின் தினேஷ் மோதக் அவர்கள், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் காவலர்களின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் முன்மாதிரியான சேவைக்காகத் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.