தமிழக வெற்றிக்கழகம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான பாரதிதாசனின் இல்ல புதுமனை புகுவிழாவில் தமிழ்நாடு பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பண மாலை அணிவித்து வரவேற்பு
விழாவிற்கு வந்திருந்த அமைச்சர் எ.வ.வேலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து த.வெ.க மாவட்ட செயலாளர், அமைச்சருக்கு மயில் மாலை, 500 ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட மாலையை அணிவித்து வரவேற்றனர். மேலும் அவரது குடும்பத்தினருடன் நின்று அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட திமுக நிர்வாகிகள் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தொடர்ந்து திமுக அரசு மற்றும் அமைச்சர்களை எதிர்த்து அனைத்து மேடைகளிலும் பேசி வரும் நிலையில் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற திருவண்ணாமலை தவெக மா.செ.வின் விழாவிற்கு வந்திருந்தது அரசியலில் பெரும் பேசும் பொருளாக மாறி உள்ளது.முன்னதாக தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்தன் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க தவெக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வேகமாக சென்ற புஸ்ஸி ஆனந்த்
பின்னர் புதுமண இல்லத்தை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி உண்ணாமலை உடனுறை அண்ணாமலையாருக்கு கற்பூரம் காண்பித்து வணங்கி, பின்னர் மாவட்ட செயலாளர் மற்றும் அவரது மனைவிக்கு த.வெ.க கட்சி கொடியின் நிறத்தில் மாலை, சில்லறை நாணயங்களால் ஆன மாலை மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட மாலைகளை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து அவருக்கு மாலை மரியாதை செய்யப்பட்டு அண்ணாமலையார் திருக்கோவில் சிவாச்சாரியார்களால் பிரசாதம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை பார்ப்பதற்காகவும், சால்வை அணிவித்து மரியாதை செய்யவும் அதிக அளவு அவர்களது கட்சி தொண்டர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அவர் விறுவிறு என்று அங்கிருந்து வேகமாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
பண மாலை அணிவித்து வரவேற்பு
விழாவிற்கு வந்திருந்த அமைச்சர் எ.வ.வேலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து த.வெ.க மாவட்ட செயலாளர், அமைச்சருக்கு மயில் மாலை, 500 ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட மாலையை அணிவித்து வரவேற்றனர். மேலும் அவரது குடும்பத்தினருடன் நின்று அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட திமுக நிர்வாகிகள் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தொடர்ந்து திமுக அரசு மற்றும் அமைச்சர்களை எதிர்த்து அனைத்து மேடைகளிலும் பேசி வரும் நிலையில் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற திருவண்ணாமலை தவெக மா.செ.வின் விழாவிற்கு வந்திருந்தது அரசியலில் பெரும் பேசும் பொருளாக மாறி உள்ளது.முன்னதாக தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்தன் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க தவெக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வேகமாக சென்ற புஸ்ஸி ஆனந்த்
பின்னர் புதுமண இல்லத்தை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி உண்ணாமலை உடனுறை அண்ணாமலையாருக்கு கற்பூரம் காண்பித்து வணங்கி, பின்னர் மாவட்ட செயலாளர் மற்றும் அவரது மனைவிக்கு த.வெ.க கட்சி கொடியின் நிறத்தில் மாலை, சில்லறை நாணயங்களால் ஆன மாலை மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட மாலைகளை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து அவருக்கு மாலை மரியாதை செய்யப்பட்டு அண்ணாமலையார் திருக்கோவில் சிவாச்சாரியார்களால் பிரசாதம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை பார்ப்பதற்காகவும், சால்வை அணிவித்து மரியாதை செய்யவும் அதிக அளவு அவர்களது கட்சி தொண்டர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அவர் விறுவிறு என்று அங்கிருந்து வேகமாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.