தமிழ்நாடு

காலையில் குறைந்த தங்கம் விலை.. மாலையில் மீண்டும் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை இன்று காலை குறைந்திருந்த நிலையில், மாலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

காலையில் குறைந்த தங்கம் விலை.. மாலையில் மீண்டும் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
Gold Price
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலை வர்த்தகம் நிறைவடையும் தருவாயில் மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று மாலை நிலவரப்படி, தங்கம் சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 87,600-க்கு விற்பனையாகிறது.

தொடரும் விலை ஏற்றம்

இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி, தங்கம் விலை சவரன் முதல் முறையாக ரூ. 85,120-க்கு விற்பனையாகி வரலாறு காணாத உச்சத்தைப் பதிவு செய்தது. தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை, கடந்த 29 ஆம் தேதி ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து சவரன் ரூ. 86,160-க்கு விற்பனையானது. மேலும், நேற்று (அக்.01) இரு முறை உயர்ந்து சவரன் ரூ. 87,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய விலை நிலவரம்

இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து, ரூ. 87,040-க்கு விற்பனையானது. ஆனால், மாலை வர்த்தகத்தில் மீண்டும் விலை உயர்ந்து, சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து ரூ. 87,600-க்கு விற்பனையாகிறது. இதன்மூலம், ஒரு கிராம் தங்கம் ரூ. 10,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள், டாலரின் மதிப்பு மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்களே இந்தத் தொடர்ச்சியான விலை உயர்வுக்குக் காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.