தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பூத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பாத்தியம்மாள் (90). இவருக்கு முருகேசன், கோவிந்தன் என்ற இரு மகன்களும் வள்ளியம்மா என்ற மகளும் உள்ளனர். மூவரும் திருமணமாகி தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். பாப்பாத்தியம்மாள் கணவர் இறந்துவிட்டதால் அவர் பூத்துப்பட்டி கிராமத்தில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் வயது மூப்பின் காரணமாக தன்னை கவனித்துக் கொள்ள முடியாமல் பெற்ற மகனையும், மகளையும் நாடிச் சென்றுள்ளார்.
இரு மகன்கள் மற்றும் மகள் வீட்டில் சிறிது காலத்தை கழித்து வந்த நிலையில் கடந்த மாதம் மூதாட்டியின் இளைய மகனான கோவிந்தராஜ், மூதாட்டியை பணிவடை செய்து கவனிக்க முடியாமல் பூத்துப்பட்டி கிராம சாலையில் பொட்டி, படுக்கையுடன் ஆட்டோவில் கொண்டு வந்து இரவு நேரத்தில் சாலையின் ஓரம் இறக்கி விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் பாப்பாத்தியம்மாள் இரவு முழுவதும் அலறி துடித்துள்ளார். அடுத்தநாள் காலை அவ்வழியாகச் சென்ற அந்தகிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகன் என்பவர் மூதாட்டியை மீட்டு கடந்த ஒரு மாதமாக அடைக்கலம் தந்து உணவு அளித்து வந்துள்ளார். தற்போது அதிக வயது மூப்பின் காரணமாகவும் பெற்ற பிள்ளைகளுடன் சேர வேண்டும் என்ற பாசத்திலும் மூதாட்டியின் வேண்டுகோளின் படி ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மூதாட்டியை பிள்ளைகளிடம் சேர்க்க வலியுறுத்தி மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்,
ஆனால் புகார் அளித்தும் மகேந்திரமங்கலம் காவல்துறையினர் கடந்த ஒரு மாதமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், மூதாட்டியை பெற்ற பிள்ளைகளுடன் சேர்க்க கோரி திடீரென இன்று மதியம் வெள்ளிச்சந்தை நான்கு ரோடு பகுதியில் கட்டில் போட்டு மூதாட்டியுடன் ஊர் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து மகேந்திரமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியை பிள்ளைகளுடன் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் வயது மூப்பின் காரணமாக தன்னை கவனித்துக் கொள்ள முடியாமல் பெற்ற மகனையும், மகளையும் நாடிச் சென்றுள்ளார்.
இரு மகன்கள் மற்றும் மகள் வீட்டில் சிறிது காலத்தை கழித்து வந்த நிலையில் கடந்த மாதம் மூதாட்டியின் இளைய மகனான கோவிந்தராஜ், மூதாட்டியை பணிவடை செய்து கவனிக்க முடியாமல் பூத்துப்பட்டி கிராம சாலையில் பொட்டி, படுக்கையுடன் ஆட்டோவில் கொண்டு வந்து இரவு நேரத்தில் சாலையின் ஓரம் இறக்கி விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் பாப்பாத்தியம்மாள் இரவு முழுவதும் அலறி துடித்துள்ளார். அடுத்தநாள் காலை அவ்வழியாகச் சென்ற அந்தகிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகன் என்பவர் மூதாட்டியை மீட்டு கடந்த ஒரு மாதமாக அடைக்கலம் தந்து உணவு அளித்து வந்துள்ளார். தற்போது அதிக வயது மூப்பின் காரணமாகவும் பெற்ற பிள்ளைகளுடன் சேர வேண்டும் என்ற பாசத்திலும் மூதாட்டியின் வேண்டுகோளின் படி ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மூதாட்டியை பிள்ளைகளிடம் சேர்க்க வலியுறுத்தி மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்,
ஆனால் புகார் அளித்தும் மகேந்திரமங்கலம் காவல்துறையினர் கடந்த ஒரு மாதமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், மூதாட்டியை பெற்ற பிள்ளைகளுடன் சேர்க்க கோரி திடீரென இன்று மதியம் வெள்ளிச்சந்தை நான்கு ரோடு பகுதியில் கட்டில் போட்டு மூதாட்டியுடன் ஊர் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து மகேந்திரமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியை பிள்ளைகளுடன் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.