செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே காஞ்சி வடக்கு மாவட்ட திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய மற்றும் பேரூர் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் விழா மற்றும் நான்கு ஆண்டு சாதனை விளக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திமுக பேச்சாளர்கள் சைதை சாதிக், அருண் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
நேராக முதல்வர் ஆக வருகிறார்கள்
கூட்டத்தில் திமுக தலைமைக் கழக பேச்சாளர் சைதை சாதிக் பேசும்போது, “கட்சி ஆரம்பிப்பது அவரவர் விருப்பம். ஆனால் கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளாகியும் ஒரு தேர்தலில் கூட போட்டியிடாமல், நேராக முதலமைச்சராக வேண்டும் என்ற கனவோடு வருகிறார்கள். அதற்கு மக்கள் தான் சரியான பாடம் புகட்ட வேண்டும். யார் கட்சி ஆரம்பித்து வந்தாலும், பிரதமர் நரேந்திர மோடியையும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மட்டும் தான் பேசுவேன் என்று வருகிறார்கள் என தவெக தலைவர் விஜய்யை விமர்சனம் செய்தார்.
மேலும் அண்ணா திமுக தற்போது அமித்ஷா திமுக கட்சியாக மாறிவிட்டதாக குற்றம் சாட்டினார். 6 ஆண்டுகளாக அதிமுக கட்சியை எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிடம் அடமானம் வைத்து விட்டதாக சாடினார். மேலும், அரசியல் மேடைகளில் ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்து கொள்வது வேறு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அம்மையார் என்று கூறி அம்மையார் ஜெயலலிதா இறக்க வேண்டும் என எந்த ஒரு திமுககாரனும் நினைக்கவில்லை என்றார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றிய திமுக
தொடர்ந்து பேசிய அவர், ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் கொடுத்த வாக்குறுதிகள் 520ல் 480 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த பள்ளி மாணவிக்கு ரூபாய் 5000 ஊக்கத்தொகையும் தொடர்ந்து மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களில் பிடித்த அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு ஊக்க தொகையினை வழங்கியும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்.
நேராக முதல்வர் ஆக வருகிறார்கள்
கூட்டத்தில் திமுக தலைமைக் கழக பேச்சாளர் சைதை சாதிக் பேசும்போது, “கட்சி ஆரம்பிப்பது அவரவர் விருப்பம். ஆனால் கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளாகியும் ஒரு தேர்தலில் கூட போட்டியிடாமல், நேராக முதலமைச்சராக வேண்டும் என்ற கனவோடு வருகிறார்கள். அதற்கு மக்கள் தான் சரியான பாடம் புகட்ட வேண்டும். யார் கட்சி ஆரம்பித்து வந்தாலும், பிரதமர் நரேந்திர மோடியையும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மட்டும் தான் பேசுவேன் என்று வருகிறார்கள் என தவெக தலைவர் விஜய்யை விமர்சனம் செய்தார்.
மேலும் அண்ணா திமுக தற்போது அமித்ஷா திமுக கட்சியாக மாறிவிட்டதாக குற்றம் சாட்டினார். 6 ஆண்டுகளாக அதிமுக கட்சியை எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிடம் அடமானம் வைத்து விட்டதாக சாடினார். மேலும், அரசியல் மேடைகளில் ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்து கொள்வது வேறு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அம்மையார் என்று கூறி அம்மையார் ஜெயலலிதா இறக்க வேண்டும் என எந்த ஒரு திமுககாரனும் நினைக்கவில்லை என்றார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றிய திமுக
தொடர்ந்து பேசிய அவர், ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் கொடுத்த வாக்குறுதிகள் 520ல் 480 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த பள்ளி மாணவிக்கு ரூபாய் 5000 ஊக்கத்தொகையும் தொடர்ந்து மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களில் பிடித்த அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு ஊக்க தொகையினை வழங்கியும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்.