புதுச்சேரியில் கடந்த ஆண்டு நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் தனது பேரன் முகுந்தனை பாமக இளைஞர் சங்க தலைவராக அறிவித்தார் ராமதாஸ். அறிவித்த அடுத்த நொடியே மேடையிலேயே அதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போதிருந்தே ராமதாஸ்க்கும், அன்புமணிக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
புதிய பொதுச்செயலாளர் நியமனம்
இதைத்தொடர்ந்து ராமதாஸ் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சொற்ப நபர்களே பங்கேற்றதால் ராமதாஸ் கோபமடைந்தார். மாவட்ட செயலாளர்கள் வராததற்கு அன்புமணியே காரணம் என குற்றம்சாட்டினார். இதைத்தொடர்ந்து பாமகவின் தலைவராக நான் தொடர்வேன் என்றும் செயல் தலைவராக அன்புமணி நியமிக்கப்படுகிறார் என்றும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து அன்புமணிக்கு ஆதரவாக உள்ள நிர்வாகிகள் பலரையும் ராமதாஸ் மாற்றி வருகிறார். இந்த நிலையில், பாமக பொருளாளர் திலகபாமாவை, சமூக நீதி பேரவைத்தலைவராக இருந்த கே.பாலு உள்ளிட்டோரை தொடர்ந்து பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனையும் ராமதாஸ் மாற்றியுள்ளார். புதிய பொதுச்செயலாளராக முரளி சங்கரை நியமிப்பதாக அறிவித்துள்ளார். முரளி சங்கர் கடந்த மக்களவைத் தேர்தலில் விசிகவின் ரவிக்குமாரை எதிர்த்து பாமக சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புமணி தலைமையில் கூட்டம்
ஒரு புறம் பாமக நிர்வாகிகள் நியமனம் என ராமதாஸ் சென்றால் மறுபுறம் நிர்வாகிகள் அப்படியே தொடர்வார்கள் என்றும் தனது தலைமையில் செயற்குழு கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் அன்புமணி.
இந்த நிலையில், பாமகவின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் தினேஷ் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அன்புமணி கலந்து கொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பது, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
தந்தையர் தின வாழ்த்து
இதற்கிடையே அன்புமணி தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம்! தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான். ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி. தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்” என தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதிய பொதுச்செயலாளர் நியமனம்
இதைத்தொடர்ந்து ராமதாஸ் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சொற்ப நபர்களே பங்கேற்றதால் ராமதாஸ் கோபமடைந்தார். மாவட்ட செயலாளர்கள் வராததற்கு அன்புமணியே காரணம் என குற்றம்சாட்டினார். இதைத்தொடர்ந்து பாமகவின் தலைவராக நான் தொடர்வேன் என்றும் செயல் தலைவராக அன்புமணி நியமிக்கப்படுகிறார் என்றும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து அன்புமணிக்கு ஆதரவாக உள்ள நிர்வாகிகள் பலரையும் ராமதாஸ் மாற்றி வருகிறார். இந்த நிலையில், பாமக பொருளாளர் திலகபாமாவை, சமூக நீதி பேரவைத்தலைவராக இருந்த கே.பாலு உள்ளிட்டோரை தொடர்ந்து பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனையும் ராமதாஸ் மாற்றியுள்ளார். புதிய பொதுச்செயலாளராக முரளி சங்கரை நியமிப்பதாக அறிவித்துள்ளார். முரளி சங்கர் கடந்த மக்களவைத் தேர்தலில் விசிகவின் ரவிக்குமாரை எதிர்த்து பாமக சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புமணி தலைமையில் கூட்டம்
ஒரு புறம் பாமக நிர்வாகிகள் நியமனம் என ராமதாஸ் சென்றால் மறுபுறம் நிர்வாகிகள் அப்படியே தொடர்வார்கள் என்றும் தனது தலைமையில் செயற்குழு கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் அன்புமணி.
இந்த நிலையில், பாமகவின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் தினேஷ் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அன்புமணி கலந்து கொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பது, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
தந்தையர் தின வாழ்த்து
இதற்கிடையே அன்புமணி தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம்! தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான். ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி. தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்” என தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.