மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்தான வீடியோவிற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக மாநாட்டில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
அதிமுகவிற்கு பாடம் எடுக்க வேண்டியதில்லை
இந்த நிலையில், அதிமுக திராவிடத்தின் உறைவிடமாகவே திகழும். பெரியாரையே இழிவுப்படுத்திய கருணாநிதியின் திமுக, அதிமுகவுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை என அதிமுக ஐ.டி விங் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் அதிமுகவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை என முன்னாள் அமைச்சரும், தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக கோட்பாட்டை விட்டுக்கொடுக்காது
இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அன்பான அழைப்பினை ஏற்று கலந்து கொண்டோம். முருக பக்தர்கள் என்ற அடிப்படையில் தான் கலந்து கொண்டோம். அரசியல் இருக்காது என்ற நம்பிக்கையோடு தான் மாநாட்டில் பங்கேற்றோம்.
மேலும் பெரியார், அண்ணா குறித்த அவதூறான வீடியோ ஒளிபரப்பப்பட்டதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அதிமுக ஒரு நாளும் கொள்கையும், கோட்பாட்டையும் விட்டுக்கொடுக்காது என்று தெரிவித்துள்ளார்.
அதிமுகவிற்கு திராவிடத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை
இந்த நிலையில், திராவிடத்திற்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கனிமொழி எம்.பி., விமர்சித்துள்ளார். சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் எம்.பி., கனிமொழி சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக தொடர்ந்து பிஜேபியுடன் இணைந்து செயல்படுவது என்பது தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யக்கூடிய ஒன்று.
அதே நேரத்திலே ஒருபடி மேலே போய் பெரியாரையும், அண்ணாவையும் அவமானப்படுத்தக்கூடிய இடத்திலேயே அதிமுகவும் இணைந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது அவர்கள் உண்மையிலேயே யார் என்பதையும், திராவிட இயக்கத்திற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாக மக்கள் உணர்ந்து கொள்ளும் அளவிற்கு காட்டியுள்ளது”என தெரிவித்துள்ளார்.
அதிமுகவிற்கு பாடம் எடுக்க வேண்டியதில்லை
இந்த நிலையில், அதிமுக திராவிடத்தின் உறைவிடமாகவே திகழும். பெரியாரையே இழிவுப்படுத்திய கருணாநிதியின் திமுக, அதிமுகவுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை என அதிமுக ஐ.டி விங் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் அதிமுகவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை என முன்னாள் அமைச்சரும், தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக கோட்பாட்டை விட்டுக்கொடுக்காது
இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அன்பான அழைப்பினை ஏற்று கலந்து கொண்டோம். முருக பக்தர்கள் என்ற அடிப்படையில் தான் கலந்து கொண்டோம். அரசியல் இருக்காது என்ற நம்பிக்கையோடு தான் மாநாட்டில் பங்கேற்றோம்.
மேலும் பெரியார், அண்ணா குறித்த அவதூறான வீடியோ ஒளிபரப்பப்பட்டதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அதிமுக ஒரு நாளும் கொள்கையும், கோட்பாட்டையும் விட்டுக்கொடுக்காது என்று தெரிவித்துள்ளார்.
அதிமுகவிற்கு திராவிடத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை
இந்த நிலையில், திராவிடத்திற்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கனிமொழி எம்.பி., விமர்சித்துள்ளார். சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் எம்.பி., கனிமொழி சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக தொடர்ந்து பிஜேபியுடன் இணைந்து செயல்படுவது என்பது தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யக்கூடிய ஒன்று.
அதே நேரத்திலே ஒருபடி மேலே போய் பெரியாரையும், அண்ணாவையும் அவமானப்படுத்தக்கூடிய இடத்திலேயே அதிமுகவும் இணைந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது அவர்கள் உண்மையிலேயே யார் என்பதையும், திராவிட இயக்கத்திற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாக மக்கள் உணர்ந்து கொள்ளும் அளவிற்கு காட்டியுள்ளது”என தெரிவித்துள்ளார்.