தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 7-8 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே அதிமுக-பாஜகவுடன் கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளப்போவதாக அறிவித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க எதிர்கட்சிகள் அரசியல் காய்களை நகர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒதுக்கப்பட்ட இடங்களை விட வருகிற தேர்தலில் கூடுதலான இடங்களை கேட்டு பெறுவோம் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். அவரது பேட்டியின் விவரம் பின்வருமாறு-
”2026 ஆம் ஆண்டு நடைப்பெற உள்ள சட்டசபை தேர்தலிலும், திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம். இந்த முறை அதிக தொகுதிகளை கேட்க உள்ளோம். எண்ணிக்கை எத்தனை என்பதை முடிவு செய்யவில்லை.
2021 ஆம் ஆண்டு போட்டியிட்ட தொகுதிகளை விட கூடுதலான தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். கூடுதலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்களை சட்டமன்றத்திற்கு அனுப்ப முடிவெடுத்துள்ளோம். தமிழ்நாட்டில் உழைக்கும் மக்களுக்கான குரல்களை ஒலிக்க வைப்பதற்கான வாய்ப்பாக இதை கருதுகிறோம். எங்களுடைய மாநிலக் குழு கூடுதல் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்துள்ள நிலையில் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
நாங்கள் கேட்கும் தொகுதிகள் கிடைக்கும் என்று நம்புகிறோம். கிடைக்காவிட்டால் என்ற யூகத்தின் கேள்விக்கு வழிவகுக்க வைக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். எங்கள் கூட்டணி வலிமையாகவே இருக்கிறது. கூட்டணியில் எங்கள் கட்சிக்கான மரியாதை, அங்கீகாரம் கிடைக்கிறது. எங்களுடைய கருத்துக்கும் மரியாதை இருக்கிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்கட்சிகள் சொல்வது சரியில்லை. முருக பக்தர்கள் மாநாடு எதற்காக நடத்தப்பட உள்ளது? பாஜக இந்த மாநாடு நடத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க திட்டமிட்டு உள்ளதாக சந்தேகம் உள்ளது. ஆகம விதிகளை மீறி பாஜக உள்ளிட்ட அமைப்பினர் செயல்படுகிறது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
2021 சட்டப்பேரவை தேர்தல்:
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டது. திருப்பரங்குன்றம், கந்தர்வக்கோட்டை(தனி), திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர்(தனி), கீழ்வேளூர்(தனி) ஆகிய 6 தொகுதிகளில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிட்ட நிலையில், கந்தர்வகோட்டை மற்றும் கீழ்வேளூர் என 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த சட்டப்பேரவை தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு சதவீதம் வெறும் 0.85 சதவீதம் மட்டுமே.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் 6 இடங்கள் பெற்றும் பெரிய வெற்றியினை அளிக்க முடியாத நிலையில், வருகிற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை தயாராக இருக்காது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒதுக்கப்பட்ட இடங்களை விட வருகிற தேர்தலில் கூடுதலான இடங்களை கேட்டு பெறுவோம் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். அவரது பேட்டியின் விவரம் பின்வருமாறு-
”2026 ஆம் ஆண்டு நடைப்பெற உள்ள சட்டசபை தேர்தலிலும், திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம். இந்த முறை அதிக தொகுதிகளை கேட்க உள்ளோம். எண்ணிக்கை எத்தனை என்பதை முடிவு செய்யவில்லை.
2021 ஆம் ஆண்டு போட்டியிட்ட தொகுதிகளை விட கூடுதலான தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். கூடுதலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்களை சட்டமன்றத்திற்கு அனுப்ப முடிவெடுத்துள்ளோம். தமிழ்நாட்டில் உழைக்கும் மக்களுக்கான குரல்களை ஒலிக்க வைப்பதற்கான வாய்ப்பாக இதை கருதுகிறோம். எங்களுடைய மாநிலக் குழு கூடுதல் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்துள்ள நிலையில் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
நாங்கள் கேட்கும் தொகுதிகள் கிடைக்கும் என்று நம்புகிறோம். கிடைக்காவிட்டால் என்ற யூகத்தின் கேள்விக்கு வழிவகுக்க வைக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். எங்கள் கூட்டணி வலிமையாகவே இருக்கிறது. கூட்டணியில் எங்கள் கட்சிக்கான மரியாதை, அங்கீகாரம் கிடைக்கிறது. எங்களுடைய கருத்துக்கும் மரியாதை இருக்கிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்கட்சிகள் சொல்வது சரியில்லை. முருக பக்தர்கள் மாநாடு எதற்காக நடத்தப்பட உள்ளது? பாஜக இந்த மாநாடு நடத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க திட்டமிட்டு உள்ளதாக சந்தேகம் உள்ளது. ஆகம விதிகளை மீறி பாஜக உள்ளிட்ட அமைப்பினர் செயல்படுகிறது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
2021 சட்டப்பேரவை தேர்தல்:
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டது. திருப்பரங்குன்றம், கந்தர்வக்கோட்டை(தனி), திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர்(தனி), கீழ்வேளூர்(தனி) ஆகிய 6 தொகுதிகளில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிட்ட நிலையில், கந்தர்வகோட்டை மற்றும் கீழ்வேளூர் என 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த சட்டப்பேரவை தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு சதவீதம் வெறும் 0.85 சதவீதம் மட்டுமே.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் 6 இடங்கள் பெற்றும் பெரிய வெற்றியினை அளிக்க முடியாத நிலையில், வருகிற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை தயாராக இருக்காது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.