திருநெல்வேலியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அறிவித்துள்ளதை பாஜக சார்பில் முழுமையாக வரவேற்கிறோம். செல்வப் பெருந்தகையின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், சாதிவாரி கணக்கெடுப்பை வேண்டாம் என்று கூறியவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி என்பதை சுட்டிக்காட்டினார்.
முதல்வர் ஸ்டாலின், 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்று கூறியதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், "2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்" என்று அதிரடியாக தெரிவித்தார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. இளைஞர்கள் மது மற்றும் கஞ்சா போன்ற போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி வருவது கவலை அளிக்கிறது. ஆசிரியர் பணியிடங்கள் இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை. திராவிட மாடல் ஆட்சி சொல்வதற்கும் செய்வதற்கும் நேர்மாறாக உள்ளது. திமுக அரசு தேர்தலை மனதில் வைத்தே செயல்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டது. தற்போது சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து விடுபட்டவர்களுக்கு வழங்கப்படும் என்று கூறுகிறார்கள்.
பாஜக தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிவிட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், "இன்னும் ஒரு வருடம் உள்ளது. திமுகவினர் வேகமாக பிரச்சாரத்தை துவக்கி வேகமாக வீட்டுக்குச் செல்லப் போகிறார்கள்" என்று கிண்டலாக கூறினார். மேலும், ராஜ்ய சபா சீட் கேட்பதாக வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்த அவர், "தமிழகத்தில் பாஜகவுக்கு நான்கு எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். கூட்டணி கட்சியிடம் சீட் கேட்க முடியாது" என்று தெளிவுபடுத்தினார்.
பெண்களைக் குறித்து தவறாக பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி பதவி பறிப்புக்கு முடிவு வந்துள்ளது. நயினார் நாகேந்திரனின் இந்த அதிரடியான கருத்துக்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்று அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும், திமுக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்த அவரது விமர்சனங்கள் அரசியல் அரங்கில் சூட்டை கிளப்பியுள்ளது
முதல்வர் ஸ்டாலின், 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்று கூறியதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், "2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்" என்று அதிரடியாக தெரிவித்தார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. இளைஞர்கள் மது மற்றும் கஞ்சா போன்ற போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி வருவது கவலை அளிக்கிறது. ஆசிரியர் பணியிடங்கள் இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை. திராவிட மாடல் ஆட்சி சொல்வதற்கும் செய்வதற்கும் நேர்மாறாக உள்ளது. திமுக அரசு தேர்தலை மனதில் வைத்தே செயல்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டது. தற்போது சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து விடுபட்டவர்களுக்கு வழங்கப்படும் என்று கூறுகிறார்கள்.
பாஜக தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிவிட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், "இன்னும் ஒரு வருடம் உள்ளது. திமுகவினர் வேகமாக பிரச்சாரத்தை துவக்கி வேகமாக வீட்டுக்குச் செல்லப் போகிறார்கள்" என்று கிண்டலாக கூறினார். மேலும், ராஜ்ய சபா சீட் கேட்பதாக வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்த அவர், "தமிழகத்தில் பாஜகவுக்கு நான்கு எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். கூட்டணி கட்சியிடம் சீட் கேட்க முடியாது" என்று தெளிவுபடுத்தினார்.
பெண்களைக் குறித்து தவறாக பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி பதவி பறிப்புக்கு முடிவு வந்துள்ளது. நயினார் நாகேந்திரனின் இந்த அதிரடியான கருத்துக்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்று அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும், திமுக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்த அவரது விமர்சனங்கள் அரசியல் அரங்கில் சூட்டை கிளப்பியுள்ளது