கொல்கத்தாவின் காஸ்பா பகுதியில் உள்ள ஒரு சட்டக் கல்லூரி வளாகத்திற்குள் கடந்த 25 ஆம் தேதி இரவு ஒரு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், மேற்கு வங்கம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள், கல்லூரியின் இரண்டு முன்னாள் மாணவர்கள் மற்றும் ஒரு தற்போதைய ஊழியர் என மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 25 ஆம் தேதி இரவு 7.30 முதல் இரவு 10.50 மணி வரை கல்லூரி வளாகத்திற்குள் இந்தத் கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படுகிறது. மனோஜித் மிஸ்ரா (31), சைப் அகமது (19), மற்றும் பிரமித் முகர்ஜி (20) ஆகிய மூன்று பேர் இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட மனோஜித் மிஸ்ராவும், ஜைப் அகமதுவும் கடந்த 26 ஆம் தேதி அன்று மாலை 7.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர். 3-வது குற்றவாளியான பிரமித் முகர்ஜி நேற்று (ஜூன் 27) அதிகாலை அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார். மூவரது செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து சோதனை செய்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவப் பரிசோதனைக்காக கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி (CNMC) மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முக்கிய சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. “ஜூலை 1 ஆம் தேதி வரை 3 பேரும் போலீஸ் காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது” என்று கொல்கத்தா காவல்துறை தலைமை வழக்கறிஞர் சௌரின் கோசல் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்தச்சம்பவத்தின் வடு நீங்காத நிலையில், மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா, "மம்தா பானர்ஜி ஆட்சியின் கீழ், மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள், கல்லூரியின் இரண்டு முன்னாள் மாணவர்கள் மற்றும் ஒரு தற்போதைய ஊழியர் என மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 25 ஆம் தேதி இரவு 7.30 முதல் இரவு 10.50 மணி வரை கல்லூரி வளாகத்திற்குள் இந்தத் கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படுகிறது. மனோஜித் மிஸ்ரா (31), சைப் அகமது (19), மற்றும் பிரமித் முகர்ஜி (20) ஆகிய மூன்று பேர் இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட மனோஜித் மிஸ்ராவும், ஜைப் அகமதுவும் கடந்த 26 ஆம் தேதி அன்று மாலை 7.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர். 3-வது குற்றவாளியான பிரமித் முகர்ஜி நேற்று (ஜூன் 27) அதிகாலை அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார். மூவரது செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து சோதனை செய்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவப் பரிசோதனைக்காக கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி (CNMC) மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முக்கிய சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. “ஜூலை 1 ஆம் தேதி வரை 3 பேரும் போலீஸ் காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது” என்று கொல்கத்தா காவல்துறை தலைமை வழக்கறிஞர் சௌரின் கோசல் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்தச்சம்பவத்தின் வடு நீங்காத நிலையில், மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா, "மம்தா பானர்ஜி ஆட்சியின் கீழ், மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.