உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையானுக்கு, அடையாளம் தெரியாத பக்தர் ஒருவர் சுமார் ரூ.140 கோடி மதிப்புள்ள 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்தத் தகவலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மங்களகிரியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் தெரிவித்தார்.
உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்குச் சாதாரண மக்கள் தொடங்கி உலக அளவில் தொழிலதிபர்கள் என லட்சக்கணக்காணோர் வரையிலும் தினசரி வருகை தருவார்கள். திருப்பதி சென்றால் திருப்பம ஏற்படும் என்ற நம்பிக்கையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினசரியும் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். ஆந்திர மாநில அரசு, திருப்பதி தேவஸ்தானம் ஆகியவை இணைந்து பக்தர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதி தொடங்கி அடிப்படை வசதிகளையும் செய்து வருகிறது.
தனது சொந்தத் தொழில் வெற்றிபெற ஏழுமலையானை வேண்டிக்கொண்டதாகவும், அதன் மூலம் தனது நிறுவனப் பங்குகளை விற்று சுமார் ரூ.6,000 முதல் 7,000 கோடிவரை லாபம் ஈட்டியதாகவும் அந்தப் பக்தர் கூறியுள்ளார். இந்தப் பெரும் செல்வத்திற்கு ஏழுமலையானே காரணம் என்று நம்பியதால், நன்றிக்கடனாக இந்தப் பெரும் தொகையை உண்டியலில் செலுத்த அவர் முன்வந்துள்ளார்.
தற்போது ஏழுமலையானின் மூலவர் சிலை, சுமார் 120 கிலோ தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த அந்தப் பக்தர், அதைவிட ஒரு கிலோ கூடுதலாக, மொத்தம் 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்க முடிவு செய்துள்ளார். இந்தச் செயல் பக்தர்களின் மத்தியில் பெரும் வியப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னர் வழங்கப்பட்ட நன்கொடைகள்
ஏழுமலையானுக்கு பக்தர்கள் பெரும் தொகையை நன்கொடையாக வழங்குவது இது முதல் முறையல்ல.
* 2025 மே மாதம், தொழிலதிபர் சஞ்சீவ் கோயங்கா ₹3.63 கோடி மதிப்பிலான வைரம் பதித்த தங்க நகையை வழங்கினார்.
* 2025 ஜூலை மாதம், சென்னையைச் சேர்ந்த சுதர்சன் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ₹2.4 கோடி மதிப்பிலான 2.5 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளித்தது.
* 2025 ஜனவரி மாதம், ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஒய்.வி.எஸ்.எஸ். பாஸ்கர் ராவ் ₹3.66 கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் கோயில் அறக்கட்டளையிடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்குச் சாதாரண மக்கள் தொடங்கி உலக அளவில் தொழிலதிபர்கள் என லட்சக்கணக்காணோர் வரையிலும் தினசரி வருகை தருவார்கள். திருப்பதி சென்றால் திருப்பம ஏற்படும் என்ற நம்பிக்கையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினசரியும் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். ஆந்திர மாநில அரசு, திருப்பதி தேவஸ்தானம் ஆகியவை இணைந்து பக்தர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதி தொடங்கி அடிப்படை வசதிகளையும் செய்து வருகிறது.
தனது சொந்தத் தொழில் வெற்றிபெற ஏழுமலையானை வேண்டிக்கொண்டதாகவும், அதன் மூலம் தனது நிறுவனப் பங்குகளை விற்று சுமார் ரூ.6,000 முதல் 7,000 கோடிவரை லாபம் ஈட்டியதாகவும் அந்தப் பக்தர் கூறியுள்ளார். இந்தப் பெரும் செல்வத்திற்கு ஏழுமலையானே காரணம் என்று நம்பியதால், நன்றிக்கடனாக இந்தப் பெரும் தொகையை உண்டியலில் செலுத்த அவர் முன்வந்துள்ளார்.
தற்போது ஏழுமலையானின் மூலவர் சிலை, சுமார் 120 கிலோ தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த அந்தப் பக்தர், அதைவிட ஒரு கிலோ கூடுதலாக, மொத்தம் 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்க முடிவு செய்துள்ளார். இந்தச் செயல் பக்தர்களின் மத்தியில் பெரும் வியப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னர் வழங்கப்பட்ட நன்கொடைகள்
ஏழுமலையானுக்கு பக்தர்கள் பெரும் தொகையை நன்கொடையாக வழங்குவது இது முதல் முறையல்ல.
* 2025 மே மாதம், தொழிலதிபர் சஞ்சீவ் கோயங்கா ₹3.63 கோடி மதிப்பிலான வைரம் பதித்த தங்க நகையை வழங்கினார்.
* 2025 ஜூலை மாதம், சென்னையைச் சேர்ந்த சுதர்சன் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ₹2.4 கோடி மதிப்பிலான 2.5 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளித்தது.
* 2025 ஜனவரி மாதம், ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஒய்.வி.எஸ்.எஸ். பாஸ்கர் ராவ் ₹3.66 கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் கோயில் அறக்கட்டளையிடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.