ஐபிஎல் 2025

RCBvsPBKS: ஐபிஎல் இறுதிப்போட்டி.. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் இறுதிப்போட்டியில் ராயல்சேலஞ்சர்ஸ் மற்றும் பஞ்சாப்கிங்ஸ் அணிகள் மோதும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

 RCBvsPBKS: ஐபிஎல் இறுதிப்போட்டி.. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!
RCBvsPBKS: ஐபிஎல் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!
நடப்பு 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று இரவு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

ஐபிஎல் 2025 18-வது சீசன் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாக தொடங்கிய நிலையில், லீக் போட்டிகள், ப்ளே ஆஃப் போட்டிகளில் வென்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஜூன் -6) இறுதிப்போட்டியில் களம்காண்கின்றன. இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இன்றைய போட்டியில், பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளில் எந்த அணி கோப்பையை வென்றாலும், அந்த அணிக்கு முதல் வெற்றிக்கோப்பையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் வரலாற்றில், இதுவரை கோப்பையை வெல்லாத இரண்டு அணிகள் இறுதிப்போட்டியில் மோதுவது இதுவே முதல்முறை என்பதால், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.