இந்தியத் திரைத்துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது தனக்கு அறிவிக்கப்பட்டது குறித்து, நடிகர் மோகன்லால் பெருமிதத்துடன் கருத்து தெரிவித்துள்ளார். இது தனது 48 ஆண்டுகால திரை வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை என்றும், இது தன் தனிப்பட்ட சாதனை அல்ல, மலையாள சினிமாவுக்கே கிடைத்த பெருமை என்றும் அவர் கூறியுள்ளார்.
தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட நிலையில், கொச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த மோகன்லால் பேசியதாவது:
"48 ஆண்டுகால சாதனை"
"48 ஆண்டுகால திரைத்துறை வாழ்க்கையில் இது ஒரு மிகப்பெரிய சாதனை. இது ஒரு தனிப்பட்ட சாதனை அல்ல. மலையாள சினிமாவுக்கு இந்த விருது வந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் பல விருதுகளைப் பெற்றுள்ளேன். ஆனால், இந்த விருது மிகவும் உயர்ந்தது. இது என் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்று என்று நினைக்கிறேன். மிகுந்த பெருமை, பணிவு, நன்றியுணர்வு, அன்பு மற்றும் மரியாதையுடன், இந்தச் சிறந்த விருதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்த விருது என்னை உருவாக்கிய மலையாளத் திரைத்துறைக்கே சேரும்" என்று அவர் தெரிவித்தார்.
"சினிமா ஒரு மாயாஜாலம்"
"சினிமாவில் இப்போது அதிக வாய்ப்புகள் உள்ளன. தொழில்நுட்பத்தால் பல முன்னேற்றங்கள் கண்டுள்ளன. சினிமா என்பது ஒரு மாயாஜாலம். 48 ஆண்டுகள் இந்தத் துறையில் நீடித்திருப்பது ஒரு வகையான சர்க்கஸ் போன்றது. நான் விருதைப் பெறுகிறேன் என்று கேள்விப்பட்டபோது, அது என் வாழ்க்கையின் மிகப்பெரிய தருணமாக உணர்ந்தேன்" என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விருது வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி நடைபெறும் விழாவில் மோகன்லாலுக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட நிலையில், கொச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த மோகன்லால் பேசியதாவது:
"48 ஆண்டுகால சாதனை"
"48 ஆண்டுகால திரைத்துறை வாழ்க்கையில் இது ஒரு மிகப்பெரிய சாதனை. இது ஒரு தனிப்பட்ட சாதனை அல்ல. மலையாள சினிமாவுக்கு இந்த விருது வந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் பல விருதுகளைப் பெற்றுள்ளேன். ஆனால், இந்த விருது மிகவும் உயர்ந்தது. இது என் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்று என்று நினைக்கிறேன். மிகுந்த பெருமை, பணிவு, நன்றியுணர்வு, அன்பு மற்றும் மரியாதையுடன், இந்தச் சிறந்த விருதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்த விருது என்னை உருவாக்கிய மலையாளத் திரைத்துறைக்கே சேரும்" என்று அவர் தெரிவித்தார்.
"சினிமா ஒரு மாயாஜாலம்"
"சினிமாவில் இப்போது அதிக வாய்ப்புகள் உள்ளன. தொழில்நுட்பத்தால் பல முன்னேற்றங்கள் கண்டுள்ளன. சினிமா என்பது ஒரு மாயாஜாலம். 48 ஆண்டுகள் இந்தத் துறையில் நீடித்திருப்பது ஒரு வகையான சர்க்கஸ் போன்றது. நான் விருதைப் பெறுகிறேன் என்று கேள்விப்பட்டபோது, அது என் வாழ்க்கையின் மிகப்பெரிய தருணமாக உணர்ந்தேன்" என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விருது வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி நடைபெறும் விழாவில் மோகன்லாலுக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.