‘பறந்து போ’ திரைப்படம் குறித்து அவர் கூறுகையில், “இது அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான ஆழமான பாசப்பிணைப்பையும், உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ஒரு நெகிழ்ச்சியான பயணத்தையும் உயிரோட்டமாக சித்தரிக்கிறது” என்று பாராட்டியுள்ளார்.
‘3BHK’ திரைப்படம் ஒரு குடும்பத்தின் கனவு இல்லத்தை அடையும் உணர்ச்சிகரமான பயணத்தை அழகாக விவரிக்கும் என்று சூரி தனது கருத்தை தெரிவித்துள்ளார். மேலும், இந்த இரண்டு படங்களும் காதல், மகிழ்ச்சி மற்றும் வாழ்வின் உண்மையான தருணங்களால் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இயக்குநர் ராம் அவர்களின் ஆழமான உணர்வுகளைத் தூண்டும் கலைநயமிக்கப் பார்வை படத்திற்கு உயிரூட்டி, இதயங்களை ஆழமாகத் தொடும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் என்று சூரி புகழாரம் சூட்டியுள்ளார். அதேபோல், இயக்குநர் ஸ்ரீகணேஷ் அவர்களின் புதுமையான படைப்பாற்றல் படத்திற்கு உயிர் கொடுத்து, மனதை மயக்கும் நெகிழ்ச்சியான அனுபவத்தை அளிக்கும் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
நடிகர் சூரியின் இந்த வாழ்த்துச் செய்தியால், இரண்டு படக்குழுவினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த படங்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ‘பறந்து போ’ மற்றும் ‘3BHK’ திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று வெளியாகும் இந்த இரண்டு அற்புதமான திரைப்படங்கள் ஒவ்வொரு குடும்பத்தின் இதயத்தையும் தொடும்! ❤️🙏💐#Paradhupo : அப்பா-மகன் இடையேயான ஆழமான பாசப்பிணைப்பையும், உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ஒரு நெகிழ்ச்சியான பயணத்தையும் உயிரோட்டமாக சித்தரிக்கும்.#3BHK : ஒரு குடும்பத்தின் கனவு… pic.twitter.com/CU8JtRxABg
— Actor Soori (@sooriofficial) July 4, 2025