சினிமா

"என்னை மிரட்டி திருமணம் செய்துகொண்டார்.. பிள்ளைகளை பார்க்கவிடவில்லை"- ரவிமோகன் கண்ணீர் மல்க பேட்டி!

விவாகரத்து கிடைக்கும் வரை படத்தில் நடிக்க மாட்டேன், என்னை அடிமையாக வைத்திருந்தார்கள் என நடிகர் ரவிமோகன் கண்ணீர் மல்க பேசினார்.


Ravi Mohan
ஆர்த்தியுடன் விவாகரத்து கிடைக்கும் வரை எந்த படத்திலும் நான் நடிக்க மாட்டேன் எனவும் தன்னை அடிமையாக வைத்திருந்ததாகவும் நடிகர் ரவிமோகன் கண்ணீர் மல்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

ரவி மோகன் - ஆர்த்தி விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், நடிகர் ரவி மோகனின் தோழியான பாடகி கேனிஷா, "தனக்கு எந்த குடும்பத்தையும் பிரிக்கும் எண்ணம் இல்லை, ரவி மோகன் தனது வாழ்க்கைப் முடிவுகளைத் தாமாகவே எடுக்கக்கூடியவர். அவர் குழந்தை இல்லை" என்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இத்தனை நாள் பேசாமல் இருந்ததே முட்டாள்தனம். சாதுவா இருந்த என்னை நிறைய பேர் சீண்டலாம் என நினைக்கிறார்கள். என் குழந்தைகளை பார்க்க விடவில்லை. விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை. 23 வருடம் இரவு பகலாக உழைத்துள்ளேன். என்னுடைய 90% படங்கள் வெற்றியடைந்துள்ளன. இளம் வயதில் என் குடும்பத்திற்காக உழைத்தேன். என் குடும்பத்திற்காக நான் இருக்கிறேன்"

"ஃபெமினிசம் என்றால் என்ன தெரியாதா? என் படங்களில் பெண்ணின் உரிமையை பற்றி பேசுகிறேன். நான் தப்பாக பெண்களை பேசுவேனா? என் தாய் அப்படி என்னை வளர்க்கவில்லை. என்னுடைய பிள்ளையை நான் எப்படி விட்டுவிடுவேன். அவர்களுக்காகவே நான் வாழ்ந்தேன். ஆனால் இன்று என் குழந்தைகளை பார்க்க விடுவதில்லை. பள்ளிக்கு கூட பாதுகாவலர்கள் உடன் அனுப்புகிறார்கள். அந்த வாழ்க்கை வேண்டாம் என தெறித்து ஓடி வந்தேன்.

நான் எப்படி சூட்டிங் வர்றானு பார்க்கிறான் என சொல்கிறார்கள். அவர்களே தயாரிப்பாளராக்கியதே நான் தான். வீட்டைவிட்டு எதுவும் இல்லாமல் வந்தவன் நான். இன்று நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன். அவர்கள் கோடிக்கணக்கில் வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள். நான் பார்க்காத நடிகைகளா? என் வேலையே அழகான பெண்களுடன் நடிப்பதுதான். 45 வயதில் அழகான பெண்கள் பின்னால் எப்படி செல்ல முடியும்.

என் பசங்களுக்காக வாயை மூடிக்கொண்டு இருந்தேன். என் அப்பா அம்மா அந்த பெண் வேண்டாம் என காலில் விழுந்து கெஞ்சினார்கள். ஒரு சின்ன அன்பு இருந்திருந்தால் நான் வந்திருப்பேனா? வாழ்க்கையில் அனைத்தையும் கொடுத்துவிட்டேன். எனக்கு நடந்தது மிகப்பெரிய அநியாயம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை சுத்தம் செய்துவிட்டு மீண்டும் வருவேன். அதுவரை நான் நடிக்கப்போவதில்லை. என்னை அடிமையாக வைத்திருந்தார்கள். கையை அறுத்துக்கொண்டு என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தார்கள். மிரட்டி தான் என்னை திருமணம் செய்துகொண்டார். ஒருத்தர் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்" என்று கண்ணீர் மல்க பேசினார்.