இரவு முழுவதும் பேயாட்டம் ஆடிய மழை – வேரோடு சாய்ந்த மரம்
சென்னை தியாகராய நகர் பர்கித் சாலையில் கனமழையால் ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது
சென்னை தியாகராய நகர் பர்கித் சாலையில் கனமழையால் ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 250 கனஅடியில் இருந்து 260 கனஅடியாக உயர்வு
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது
சென்னை விமான நிலையம் - சென்ட்ரல் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்; மற்ற வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவதால் பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிக ரத்து
மழையின் போது உதவி தேவைப்படுவோர்களுக்காக சென்னை மாநகர காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு
சென்னையில் தொடர் கனமழை காரணமாக வரத்து குறைவால் காய்கறி தட்டுப்பாடு
ரயில் புறப்பாடு மற்றும் வருகை குறித்து அறிந்துகொள்ள தெற்கு ரயில்வே உதவி எண்கள் அறிவிப்பு
மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்கள்... அபராதம் விதிப்பு? – காவல்துறை விளக்கம்
கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் தக்காளி கிலோ ரூ.120க்கு விற்பனை
சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு அகிய 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
கனமழை காரணமாக கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம். இன்று முதல் 3 நாளைக்கு கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை... தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்
கோவை மாவட்டத்தில் பள்ளிகள் இன்று மதியம் வரை மட்டுமே செயல்படும் - ஆட்சியர் அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன.
தமிழ்நாட்டில் இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்
இன்று அதிகாலை 5.30 மணியளவில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாகவும் இது வட தமிழ்நாடு, புதுச்சேரியையொட்டி தெற்கு பகுதியில் நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் இன்று ஆலோசனை
"வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை” - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
சென்னையில் 21 சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டடதாக மாநகராட்சி தகவல்
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் தொடரும் மழை
புதுக்கோட்டை விளையாட்டு மைதானம், போக்குவரத்து அலுவலகம் முழுவதும் குளம் போல் தேங்கிய மழை நீர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் குளம் போல் தேங்கிய மழை நீர்
மதுரையில் இடைவிடாது பெய்த கன மழையால் மணி நகரம் ரயில்வே சுரங்கப் பாதையில் 5 அடி உயரம் வரை சூழ்ந்த மழைநீர்
தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 17 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.