K U M U D A M   N E W S

19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 31) 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீபாவளி என்றும் பாராமல் வெளுக்கும் கனமழை..

தீபாவளி பண்டிகை தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்தும், புத்தாடைகள் உடுத்தியும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பெய்து வரும் கனமழையால் சிறுவர்கள் பட்டாசுகள் வெடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

Heavy Rain : 15 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம் |

நாளை திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

மக்களே உஷார்… மீண்டும் அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்திற்கு அடுத்த 1 மணி நேரத்திற்கு அதிகனமழைக்கான வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எதிரொலி... சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

சென்னையில் பெய்த கனமழையால் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சட்டென மாறிய வானிலை... சென்னையை குளிர்வித்த மழை

சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், தியாகராய நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் எனவும் வானிலை அய்வு தெரிவித்துள்ளது.

11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - அடித்தது எச்சரிக்கை மணி..!

தமிழ்நாட்டில் நவம்பர் 1ம் தேதி ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஓப்பனிங் நல்லாதான் இருக்கு.. ஆனால் ஃபினிஷிங்.. தவெக மாநாடு குறித்து சீமான்

தொடக்கம் சரியாகத்தான் இருக்கிறது, போக போகத்தான் தெரியும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தவெக மாநாடு குறித்து கூறியுள்ளார்.

திடீரென பொளந்த கனமழை - கதி கலங்கிய குமரி

வடிகால்வாய்களை முறையாக தூர்வாரததால் மழைநீர் தேங்கியுள்ளதாக பொதுமக்கள் புகார்.

Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள்

கரையை கடந்தது டானா புயல், தாம்ரா, பத்ராக் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை போன்ற முக்கிய செய்திகள் காண

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்காசி, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

கரையை கடந்தது டானா புயல்

ஒடிசா அருகே கரையை கடந்தது டானா புயல்

கொட்டித்தீர்த்த கனமழை – வீடுகளுக்குள் பெருக்கெடுத்த வெள்ளம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை. கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமம்

19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைநீருடன் கலந்த கழிவுநீர்... வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கழிவுநீருடன் மழைநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறை வடிகால் வசதி ஏற்படுத்தாததால் குடியிருப்புக்குள் மழைநீர் தேங்குவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

குமுதம் செய்தி எதிரொலி; மதுரையில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றம்

வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதன்காரணமாக மதுரையின் செல்லூர் உள்ளிட்ட பகுதியில் மழை நீர் தேங்கியிருப்பது தொடர்பாக குமுதம் செய்திகளில் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீரை வெளியேற்றினர்.

திருப்பத்தூரில் வெளுத்து வாங்கும் கனமழை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை. விண்ணமங்கலம், அய்யனூர், ஆலாங்குப்பம், பெரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

இடைவிடாமல் கொட்டிய மழை... சாலைகளில் பெருக்கெடுக்கும் மழைநீர்

நாகர்கோவிலில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர். சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு

Dana Puyal Update : தீவிர புயலாக உருவெடுக்கும் ”டானா”பாதிப்பு யாருக்கு?

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் வட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

14 மாவட்டங்களுக்கு கனமழை.. எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, நெல்லை, குமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் சீட்டு கட்டு போல் சரிந்த கட்டிடம்.. கட்டிட உரிமையாளர் மகனை கைது செய்த போலீஸ்

தொடர் கனமழையால் பெங்களூருவில் கட்டுமானத்தில் இருந்த 6 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்நிலையில் கட்டிட உரிமையாளரின் மகன், காண்ட்ராக்டர் முனியப்பா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இருக்கு..கனமழை இருக்கு.. - எச்சரிக்கும் வனிலை மையம்..எதிர்கொள்ள தயாரா இருங்க மக்களே!

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

“அரசு எந்த உதவியும் செய்யல..” எம்எல்ஏ கோ.தளபதியை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதம்

மதுரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வுக்கு சென்ற எம்எல்ஏ கோ.தளபதியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு எந்த உதவியையும் செய்யவில்லை என குற்றம்சாட்டினர்.

சுற்றுலாப் பயணிகளே அங்க மட்டும் போகாதீங்க..! - வனத்துறை விதித்த அதிரடி தடை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆழியார் கவியருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அருவியில் குளிக்க 3வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது.

"போச்சு.. நாசமா போச்சு.." வெள்ளத்தில் மிதக்கும் கார்கள்.. என்ன நடக்கிறது கோவையில்..?

கோவையில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார், தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெள்ளத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்து செல்லப்பட்டன.