K U M U D A M   N E W S

சென்னை

ஜன.29ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

வரும் 29-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என துரைமுருகன் அறிவிப்பு.

பாழடைந்த கட்டடத்தில் சிக்கிய மாணவிகள்... இரவு முழுவதும் பாலியல் வன்கொடுமை... சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது

சென்னையில் மூன்று பள்ளி மாணவிகளை கடத்திச் சென்றதாக மூன்று இளைஞர்கள் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நீதிமன்றம் உத்தரவு..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கொண்டு வரப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள்  பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து  பரிந்துரைகளை அளிக்க தமிழ்நாடு காவல்துறை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

விமானத்தில் நடுவானில் 2 பயணிகளுக்குள் சண்டை.. தொடர் விசாரணைக்கு ஜாமினில் விடுவிப்பு..!

கொச்சியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த தனியார் பயணிகள் விமானம், நடு வானில் பறந்தபோது, விமானத்திற்கு வெளிநாட்டு பயணி உட்பட 2 பேர் சண்டை போட்டுக் கொண்ட சம்பவத்தில், தொடர் விசாரணைக்கு பின்னர் இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

76-வது குடியரசு தின விழா: உயர்நீதி மன்றத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த நீதிபதி

நாட்டின் 76-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

76th Republic Day 2025 : குடியரசு தின விழா; தேசியக் கொடி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

76th Republic Day 2025 : நாட்டின் 76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்.

76-வது குடியரசு தினம்.. தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆளுநர் மரியாதை

சென்னையில் நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

காசிமேட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் – உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி

சென்னை காசிமேடு மீன் சந்தையில் ரசாயனம் *கலந்த 350 கிலோ மீன்கள் பறிமுதல்.

சென்னை சேப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று போக்குவரத்து மாற்றம்

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டி20 கிரிக்கெட்.

மொழிப்போர் தியாகிகள் தினம்; முதலமைச்சர் மரியாதை

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீர்த்த மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிப்பு.

ரவுடிகளுக்கு எதற்கு பட்டப்பெயர்? உயர்நீதிமன்றம் கேள்வி

ரவுடிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதை போலீசார் தவிர்க்க வேண்டும்.

IND vs ENG 2nd T20: போட்டியை காண செல்வோருக்கு குட் நியூஸ்

கிரிக்கெட் போட்டியை காண செல்வோருக்கு பஸ் டிக்கெட் இலவசம்.

"ஊழலை இரும்புக்கரம் கொண்டு ஒழிப்போம்" - சென்னை உயர்நீதிமன்றம்

இரும்பை முதல் முறையாக பயன்படுத்தி இரும்பு காலத்தின் முன்னோடி தமிழகம் என பெருமைப்படும் நேரத்தில், ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து உலகளவில் முன்னோடியாக இருப்போம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறைக் கைதிகளுக்கு எதிராக காட்டப்படும் கடுமையை ஊழலை ஒழிப்பதிலும் காட்ட வேண்டும்- உயர்நீதி மன்றம்

சிறைக் கைதிகளுக்கு எதிராக காட்டப்படும் கடுமையை ஊழலை ஒழிப்பதிலும் காட்ட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது. 

மாற்றுக்கட்சியினர் 3000 பேர் முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

கோவை வடக்குமாவட்டம், நெல்லை மத்திய மாவட்டம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட நாதக செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்.

சென்னை போதைப்பொருள் கடத்தல் விசாரணையில் புது திருப்பம்... களமிறங்கும் என்ஐஏ?

சென்னை அரும்பாக்கத்தில் கேட்டமைன் போதைப்பொருள் விற்பனையில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை.

ஏறுமுகத்தில் தங்கம் விலை.., இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.60,440க்கு விற்பனை.

சென்னையில் மின்சார ரயில்கள் தாமதம்

சென்னை பெரம்பூர் கேரேஜ் - பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் இடையே சிக்னல் தொழில்நுட்ப கோளாறு.

மெரினா காமராஜர் சாலையில் பிரமாண்டமாக நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை 

குடியரசு தினவிழா ஜனவரி 26-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் இதற்கான அணிவகுப்பு ஒத்திகை மெரினா காமராஜர் சாலையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய QR கோடு மூலம் அனுமதி.. விரைவில் அமல்படுத்த திட்டம்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து  பல்கலைக்கழக வளாகத்தில் நுழைவதற்கு கியூஆர் கோடுடன் கூடிய அனுமதி வழங்கும் வகையில் விசிட்டர் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் அமைக்கப்பட உள்ளது. 

கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த வழக்கு... தூக்கு தண்டனை கைதி விளக்கமளிக்க உத்தரவு..!

கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரிய விசாரணையில், தனக்கு வழக்கறிஞர் நியமித்துக் கொள்கிறாரா என விளக்கமளிக்க, குற்றவாளி சதீஷை ஜனவரி 29ம் தேதி காணொலியில் ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Swiggy, Zomato நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

உணவு டெலிவரி செய்யும் நபர்களை கண்காணிக்கக் கோரிய வழக்கில் ஸ்விகி, சோமாட்டோவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.

தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது- ஸ்டாலின் பெருமிதம்

தொல்லியல் துறை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியதாக பெருமிதம் தெரிவித்தார்.

அடையாறு போலீசாரிடம் SIT விசாரணை

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி வன்கொடுமை வழக்கு தொடர்பாக அடையாறு போலீசாரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை.

நீதிமன்ற உத்தரவு.. வெளியேற சொன்னால் தற்கொலை செய்து கொள்வோம்.. பொதுமக்கள் கவலை

அரும்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மக்களை வெளியேற கூறி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் தங்களை காலி செய்ய சொன்னால் தற்கொலை செய்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என  மூதாட்டி ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.