K U M U D A M   N E W S

சென்னை

சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Gold Rate Today: மீண்டும் ஏறிய தங்கம் விலை

ஒரு கிராம் தங்கம் (இன்று ) ரூ.220 உயர்ந்து ரூ.8,930க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.71,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

IPL2025:10-வது தோல்வியை சந்தித்த CSK புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்.. RR ஆறுதல் வெற்றி!

நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனில் நேற்று நடைபெற்ற 62வது லீக் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி, ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது.

முதலமைச்சருக்காக நாங்கள் காத்திருக்க வேண்டுமா? – பெண்கள் போலீசாருடன் வாக்குவாதம்!

முதலமைச்சரின் கான்வாய் வாகனங்கள் செல்வதற்காக நீண்ட நேரம் பேருந்தில் காக்க வைத்ததால் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் விஜயகுமார் வீட்டில் கொள்ளையடித்த வழக்கு.. 21 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய கொள்ளையன்!

நடிகர் விஜயகுமார் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய கொள்ளையனை, 21 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.

வேகத்தடையினால் விபத்து.. விபத்தில் சிக்கிய கர்ப்பிணி.. பிறந்த‌து பெண் குழந்தை!

சென்னையில் நேற்று இரவு கேகே நகர் பகுதியில் விபத்திற்குள்ளான ஒன்பது மாத கர்ப்பிணி பெண்ணிற்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

ரயில் நிலையத்தில் ரூ.38 லட்சம் பறிமுதல்.. ரயில்வே போலீசார் விசாரணை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 38 லட்சம் ரூபாய் பணம் ரயில்வே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் 8 விமானங்கள் திடீரென ரத்து.. பயணிகள் அவதி!

சென்னையில் இருந்து திருச்சி, தூத்துக்குடி, மதுரை, ஆகிய நகரங்களுக்கு செல்லும் 8 விமானங்கள் முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் அவதியடைந்தனர்.

அமித்ஷா எங்களை சந்திக்காதது வருத்தமளிக்கிறது - ஓ.பன்னீர் செல்வம்

சென்னை வந்த அமித்ஷா, எங்களை அழைக்காதது வருத்தமே யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எங்களது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

துணைவேந்தர்கள் நியமனம் - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.