மீண்டும் வன்முறை பூமியான மணிப்பூர்.. இரு பிரிவினரிடையே மோதல்.. 6 பேர் உயிரிழப்பு!
வன்முறை மேலும் பரவாமல் தடுக்க ஹெலிகாப்டர்கள் மூலம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வன்முறை நடந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அமைதியாக இருந்த மணிப்பூரில் மீண்டும் வன்முறை ஏற்பட்டது மாநில பாஜக அரசுக்கும், மத்திய அரசுக்கும் மீண்டும் தலைவலியாக மாறியுள்ளது.