K U M U D A M   N E W S

அரசு

தரையில் கிடந்த பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள்.. 'குமுதம் செய்திகள் எதிரொலி'யால் நடவடிக்கை

வெறும் தரையில் பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் படுக்க வைக்கப்பட்டு இருந்தது தொடர்பாக, 'குமுதம் செய்திகள்’ செய்தி வெளியிட்டதை அடுத்து, எம்.எல்.ஏ எழிலரசன் விரைந்து நடவடிக்கை எடுத்தார்.

பண மோசடி வழக்கு: இளவரசியின் உறவினர் பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி

பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இளவரசியின் உறவினர் பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசு பணியில் தொய்வு... 4 அதிகாரிகள் பணியிட மாற்றம்

மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதைத்தொடர்ந்து அரசுப்பணியில் தொய்வு ஏற்படுத்தியதாக 4 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்

பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது மாணவி தாக்குதல்... போராட்டத்தில் குதித்த ஓட்டுநர், நடத்துநர்கள்

சென்னை குரோம்பேட்டையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை சட்டக்கல்லூரி மாணவி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் ஓட்டுநர், நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

'தமிழ்நாட்டு பள்ளிகளின் அவலநிலை தெரியுமா?'.. முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக அடுக்கடுக்கான கேள்வி!

''தமிழகத்தின் பதின்ம வயது மாணவர்கள் தமிழில் எழுதப் படிக்க தடுமாறும் நிலை உருவாகியுள்ள வேளையில், தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் தேசிய கல்விக் கொள்கையை (NEP) முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பதன் காரணம் என்ன?'' என்று பாஜக கூறியுளளது.

சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசின் அனுமதி தேவையா? - RTI சொல்வது என்ன?

Caste Wise Census in Tamil Nadu : சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசின் அனுமதி தேவையா அல்லது மாநில அரசே நடத்திக்கொள்ளலாமா என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெளிவு பிறந்துள்ளது.

அச்சுறுத்தும் குரங்கம்மை.. உடனே இதை செய்யுங்க.. மாநிலங்களுக்கு மத்திய அரசு வார்னிங்!

18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண்களையே குரங்கம்மை அதிகம் தாக்குகிறது. குறிப்பாக குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட 50% பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகையால் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களை குரங்கம்மை அதிகம் தாக்குகிறது.

இபிஎஸ் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - தமிழக அரசு

தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 1,331 விடுதிகளில் 98,909 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். ஆதிதிராவிடர் மாணவர்களின் நலன் காக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற சூழல் இருக்கும் நிலையில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை ஆதாரமற்றது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.  

தேசிய கல்விக்கொள்கையை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தேசிய கல்விக்கொள்கையை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. தேசிய கல்விக்கொள்கையை மறுப்பதால் மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

MahaVishnu: “போலீஸுக்கு கஷ்டம் வேண்டாம்... சென்னைக்கே வருகிறேன்.” வீடியோவில் மகா விஷ்ணு விளக்கம்!

அரசுப் பள்ளியில் ஆன்மிக போதனை குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய மகா விஷ்ணு, வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், எங்கும் ஓடி ஒளியவில்லை, சென்னை வருகிறேன் என ஆஸ்திரேலியாவில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இஷ்டபடி ரீல் சுற்றிய மகா விஷ்ணு.. சொன்னது ஒன்று செய்தது ஒன்று

தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள். மாணவர்கள் மத்தியில் என்ன பேச வேண்டும் என்று சொல்லியதற்கு மாறாக உளறித் தள்ளியதே சர்ச்சைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

ஆன்மிகமா? பகுத்தறிவா? அரசு பள்ளியை சுழன்றடிக்கும் சர்ச்சை

ஆன்மிகமா? பகுத்தறிவா? அரசு பள்ளியை சுழன்றடிக்கும் சர்ச்சை, சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் கார்ப்பரேட் சொற்பொழிவாளரை கொண்டு ஆன்மிக போதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

'பள்ளிகளில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது'.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

சென்னை அரசு பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை அறிக்கையை ஐந்து நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

MahaVishnu: அரசுப் பள்ளிகளில் கார்ப்பரேட் ஆன்மிக போதனை.. சமூக வலைதளங்களில் வைரலாகும் சர்ச்சை வீடியோ!

சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் கார்ப்பரேட் சொற்பொழிவாளரை கொண்டு ஆன்மிக போதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு விவகாரம் - பள்ளிக்கல்வி இயக்குநர் அவசர ஆலோசனை

சென்னை பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்திய விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளார்

தவெக மாநாடு... திமுகவுக்கு பயம்.. - வெளிப்படையாக சொன்ன நயினார் நாகேந்திரன்

அதிமுக மற்றும் பாஜக இடையே மீண்டும் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

"முதல் முறை குற்றவாளிக்கு சிறையில் தனி இடம்"

சிறையில் முதல் முறை குற்றவாளிகளை தனியாக வைப்பதற்கு திட்டங்கள் ஏதும் உள்ளதா? என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது

பள்ளிகளில் நாப்கின் - நீதிமன்றம் அதிருப்தி

அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் பராமரிப்பு தொடர்பான உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துக் கொண்ட வழக்கில் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு அதிருப்தி

"அமைச்சர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் இந்தி..அரசு பள்ளியில் NO இந்தி.." - எச். ராஜா கடும் தாக்கு

அமைச்சர்களின் பிள்ளைகள் சிபிஎஸ்இ பள்ளியில் இந்தி படிக்கும் போது அரசு பள்ளியில் இந்தி கற்பிக்க எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார் எச். ராஜா.

”அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்திருக்கிறது” - ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் விமர்சனம்

அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்திருக்கிறது என தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளை விமர்சித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

The Goat Special Show : 'தி கோட்' - தமிழக அரசு திடீர் உத்தரவு

The Goat Special Show : விஜய் நடித்துள்ள GOAT படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி; இரண்டு நாட்கள் அனுமதி கேட்ட நிலையில், நாளை ஒரு நாள் மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து உத்தரவு.

The Goat Movie Release : கோட் பட பிளக்ஸ், பேனர் - நீதிமன்றம் உத்தரவு

The Goat Movie Release : விஜய் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள GOAT படத்திற்கு பிளக்ஸ், பேனர்கள் வைக்க அனுமதிக்கோரி மனு. பிளக்ஸ், பேனர்கள் வைக்க உள்ளாட்சி நிர்வாகத்தை அணுகி அனுமதி பெற்றுக்கொள்ளலாம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

3 வயது குழந்தை நீச்சல் குளத்தில் விழுந்து பலி - அரசு மருத்துவமனையில் உபகரணங்கள் இல்லாததால் சோகம்

சென்னையை ஈஞ்சம்பாக்கம் பகுதியில், நீச்சல் குளத்தில் விழுந்த குழந்தையை, காப்பாற்றுவதற்கான உபகரணங்கள் இல்லாததால் உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உதயநிதியை துணை முதலமைச்சராக அறிவிக்க தீர்மானம்

தமிழகத்தில் அதிக அளவில் இளைஞர்கள் இருப்பதால் புதிய கல்விக் கொள்கையை புகுத்த மத்திய அரசு முயற்சி செய்வதாக எம்.பி. தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

என்னய்யா இது..! அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் காவலாளி!

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு காவலாளி மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.