K U M U D A M   N E W S

சென்னை

டீ குடிப்பதால் எதுவும் மாறாது.. சரளமாக பொய் சொல்கிறார்கள்.. சசிகலா தாக்கு

தமிழக முதலமைச்சர் டீ கடையில் டீ குடிப்பதாலையோ, மைக்கை பிடித்துக்கொண்டு தங்களின் பெருமைகளை மட்டும் பேசுவதாலேயோ எதுவும் மாற போறதில்லை என்று சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையின் முக்கிய சாலையில் திடீர் பள்ளம்... மக்கள் பீதி

சென்னை மதுரவாயல் எம்எம்டிஏ காலனி 2வது பிரதான சாலையில் இன்று திடீர் பள்ளம் ஏற்பட்டது.15 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆம்னி பேருந்துகளுக்கு வரி கிடையாது.. நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

கொரோனா ஊரடங்கின்போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! மீனவர்களுக்கு எச்சரிக்கை

வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இன்று (அக். 17) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. விசாரணையில் வெளிவந்த உண்மை

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மசூதிக்கு அனுஷா தயாநிதி என்ற பெயரில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் அது புரளி என தெரிய வந்தது. 

களத்தில் முதலமைச்சர்.. சொந்த தொகுதியில் அதிரடி ஆய்வு

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

ஆம்ஸ்ட்ராங் வழக்கு.. முக்கிய சாட்சியை ஏர்போர்ட்டில் சுற்றி வளைத்த போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சுரேஷ் கிருஷ்ணா என்பவர் சாட்சியாக சேர்க்கப்பட்டு விசாரணைக்கு அழைத்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரை பிடித்த தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்... சென்னையில் மழைக்கு வாய்ப்பு..? லேட்டஸ்ட் அப்டேட்!

புதுச்சேரி - நெல்லூருக்கு இடையே, சென்னைக்கு வடக்கே கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அதேநேரம் சென்னையில் இன்று மழை இருக்குமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான அப்டேட் கொடுத்துள்ளார்.

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன...?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,160க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.57,280க்கு விற்பனையாகிறது.  

2 நாளில் 11.84 லட்சம் பேருக்கு அம்மா உணவகங்களில் இலவச உணவு..

கனமழை பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2 நாட்களில் 11.84 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கை.. 213 மருத்துவ முகாம்கள் அமைப்பு

சென்னையில் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கையாக 213 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மருத்துவ முகாம்களுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

அதிகாலையிலேயே பரபரப்பான சென்னை.. அதிரடியாக களமிறங்கிய வருமான வரித்துறை

சென்னை கோடம்பாக்கத்தில் பூர்விகா செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் சோதனை.

வானிலை ஆய்வு மையம் கொடுத்த ரிப்போர்ட்! அதிர்ச்சியில் இருந்து மீண்ட மக்கள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

சென்னை தத்தளிக்க யார் காரணம்? அதிமுக + பாஜக vs திமுக

சென்னை தத்தளிக்க யார் காரணம்? அதிமுக + பாஜக vs திமுக

பள்ளி , கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும்

ரெட் அலெர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதால் இன்று (அக். 17)) சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லீவ் கிடையாது... பேக்-அ மாட்டிட்டு கிளம்புங்க! பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு!

ரெட் அலெர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதால் இன்று (அக். 17)) சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களே விலகியது கண்டம் "ரெட் அலர்ட்"

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று (அக். 17) விடுக்கப்பட்டிருந்த ரெட் அலெர்ட் விலக்கி கொள்ளப்பட்டதாக அறிவிப்பு!

ரெட் அலெர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டது.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நாளை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

RED ALERT-னு சொன்னாங்க... ஒரு சொட்டு மழை இல்லை... அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

வானிலை முன்னறிவிப்புகள் மேலும் துல்லியமாக இருக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அட்டை பெட்டிக்குள் பச்சை உடும்பு, கருங்குரங்குகள்.. மலேசிய நாட்டு பெண் சிக்கியது எப்படி?

மலேசியாவில் இருந்து ஆப்பிரிக்க பச்சை உடம்பு, கருங்குரங்குகளை கடத்திய மலேசிய பெண் உட்பட 2 பேரை சுங்க இலாக அதிகாரிகள் கைது செய்தனர்.

ஆறாக மாறிய சென்னையின் முக்கிய சாலை.. குளித்து மகிழும் சிறுவர்கள்

கடந்த 2 நாட்களாக சென்னையில் பெய்த கனமழையால் ஜீவா ரயில் நிலையம் அருகே மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. அதில் சிறுவர்கள் குதித்து விளையாடி வருகின்றனர். 

மெட்ரோ ரயில் சேவை நிலை என்ன?.. எந்தெந்த பகுதிகளில் இருந்து இயக்கம்: விவரம் இதோ

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (17.10.2024) முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை?

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என தகவல் வெளியாகியுள்ளது.

12 மாவட்டங்களில் டேஞ்சர்..! - ருத்ரதாண்டவம் ஆடப்போகும் கனமழை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

3 நாட்கள் ஆச்சு.. இபிஎஸ் கால்கள் தரையை தொட்டுள்ளதா? - அமைச்சர் சேகர்பாபு கேள்வி

மழை ஆரம்பித்து 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கால்கள் எங்கேயாவது தரையில் பட்டுள்ளதா? என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.