K U M U D A M   N E W S

கோடிக்கணக்கில் காணிக்கை செலுத்திய பக்தர்கள்.. கோயில் நிர்வாகம் தகவல்

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில்  3 கோடியே 74 லட்சத்து 95 ஆயிரத்து 627 ரூபாயை  பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அரசு பொறியாளர் உடல் சடலமாக மீட்பு.. யோகி ஆட்சியின் சாதனை.. காங்கிரஸ் விளாசல்

உத்திரப்பிரதேசத்தில் காணாமல் போன பொதுப்பணித்துறை பொறியாளர் உடல் அணையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லீக்கான நடிகையின் ஆபாச வீடியோ.. வழியில்லாமல் உண்மையை உடைத்த ஸ்ருதி

நடிகை ஸ்ருதி நாராயணன் தொடர்பான அந்தரங்க வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் அந்த வீடியோ குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். 

தடைகளை தகர்த்தெறிந்த விக்ரமின் ‘வீர தீர சூரன்’.. உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படம் பல தடைகளை தாண்டி நேற்று மாலை திரையரங்குகளில் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

நில அபகரிப்பு வழக்கு:அமைச்சர் மா.சுப்பிரமணியன் மனு மீது நாளை தீர்ப்பு

நீதிபதி வேல்முருகன் முன், நாளை 30வது வழக்காக இந்த வழக்கு தீர்ப்புக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

வீடு ஜப்தி விவகாரம் - நடிகர் பிரபு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

அன்னை இல்லத்தின் முழு உரிமையாளராகியுள்ள நிலையில், சகோதரர் ராம்குமார் தொடர்புடைய நிதி பிரச்னையில் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக நடிகர் பிரபு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

கடந்த 3 மாதங்களில், 11 வெவ்வேறு சம்பவங்களில் 147 மீனவர்கள் மற்றும் 19 படகுகளை சிறை பிடித்துள்ளதை தனது கடிதத்தில் வருத்தத்தோடு குறிப்பிட்டுள்ளார். 

“துக்க முகங்களைக் காட்டுவதில் அப்படி என்ன பேரானந்தம்?”- தயாரிப்பாளர்கள் சங்கம் கேள்வி

சக மனிதர்களின் இழப்பை தம் வீட்டு இழப்பாகக் கருதி துயர் விசாரிக்க வரட்டும் கையில் கேமரா இல்லாமல், இனிவரும் காலங்களில் இச்செயல் முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து ஊடகங்களுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் இவ்வேண்டுகோளை வைக்கிறது.

வேங்கை வயல் விசாரணை முழுமையாக இல்லை என குற்றச்சாட்டு-அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

காவல்துறை விசாரணை முழுமையாக இல்லை என்று கூறும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவிப்பு

சிறார்கள் ஏற்படுத்தும் வாகன விபத்து  முதலிடத்தில் தமிழ்நாடு.. அதிர்ச்சித் தரும் iRAD ரிப்போர்ட்!

இந்தியளவில் சிறுவர்கள் அதிகம் விபத்தில் சிக்கும் மாநிலம் தமிழ்நாடு தான் என்று வெளியாகி இருக்கும் புள்ளி விபரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அன்புத் தம்பிகளுக்கு, தங்கைகளுக்கு...வாழ்த்து சொன்ன விஜய்

உற்சாகத்தோடும் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் பொதுத்தேர்வினை எதிர்கொள்ளுங்கள்! வெற்றி நிச்சயம்!” என விஜய் தெரிவித்துள்ளார்.

அத்திப்பட்டு புதுநகர் - எண்ணூர் இடையே ரயில் சேவை பாதிப்பு.. பயணிகள் அவதி!

அத்திப்பட்டு புதுநகர் - எண்ணூர் இடையே எஞ்சினுக்கு மின்சாரம் கடத்தும் கொக்கி வயரில் சிக்கியதால், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்லும் ரயில் சேவை 1மணி நேரம் பாதிப்பட்டதால் ரயில் பயணிகள் அவதியடைந்தனர். 

குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை...நாடகமாடியது அம்பலம்

திருமணத்திற்கு முன் தன் மனைவிக்கு ஒருவருடன் காதல் இருந்ததும், இதனால் மனைவி நடத்தையில் சந்தேகமடைந்த ஜாவித் தினமும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து- ஆன்லைன் சேவைகள் பாதிப்பு

முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது

தமிழில் குடமுழுக்கு நடத்த அரசாணை.. நா.த.க மனுவிற்கு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து, அரசாணை பிறப்பிக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வெறுப்பரசியலின் ஆணிவேரே அறிவாலயம் தானே…முதலமைச்சருக்கு வானதி சீனவாசன் கேள்வி

இருமொழி தான் வேண்டும் என்ற உங்கள் போலி பரப்புரையும், தமிழகத்தில் கழிவுகளைக் கொட்டும், கேரள அரசையும் குடிநீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் இணைத்துக் கொண்டு தொகுதி மறுவரையறை என்ற பெயரில் நீங்கள் போட்ட நாடகமும், மக்களிடம் எடுபடாமல் படுதோல்வியடைந்துவிட்டது என வானதி சீனிவாசன் பதிவு

பேட்டரி வாகனங்கள் யூஸ் பண்ணுங்க.. இஸ்ரோ விஞ்ஞானி கொடுக்கும் அட்வைஸ்!

அனைவரும் பேட்டரி வாகனங்கள் வாங்கினால் தான் பசுமையான உலகத்திற்கு நாம் செல்ல முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.